Wednesday, October 7, 2009

என்னுடைய ’வங்கியில் ஒரு அனுபவ’த்தின் தொடர்ச்சியாகும் இது. பத்து நாட்களுக்கு முன் வங்கிக்குச் சென்றிருந்த போது, அவர்கள் இன்னொரு நாள் வரச்சொன்னதும், நான் கடுப்படைந்து, கண்டபடி ஆங்கிலத்தில் திட்டி, அடுத்து நான் போவது வங்கியின் ஆம்பட்ஸ்மேனிடம் புகார் செய்வதற்காக என்றெல்லாம் மிரட்டியதற்குப் பின் காத்திருக்கச் சொன்னார்கள்.ஒரு மணி நேரம் கழித்து என் ’நண்பர்’ வந்து, ‘ஸார், உங்களுக்கான ஏடிஎம் அட்டை தபாலில் அனுப்பப்பட்டு, விலாசம் தெரியவில்லை என்று பெங்களுருக்குத் திரும்பிப் போய்விட்டது, நீங்கள் மீண்டும் ஒரு மனு எழுதிக்கொடுங்கள், நாங்கள் பார்க்கிறோம்’ என்றாரே பார்க்கலாம்!
நான் கோபம் தலைக்கேறியவனாக, ’என்ன ஸார், விளையாடுகிறீர்களா?’ என்று எகிற, மற்றோரு அலுவலர் (எல்லா வங்கிக் கிளைகளிலும் வேலை செய்வதற்கென்றே இருக்கும் இந்த மாதிரி ஒருவரைப் பார்க்கலாம்!) குறுக்கிட்டு, இன்னும் அரைமணி நேரம் காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார்.உள்ளே என்ன நடந்ததோ, ஒரு கையெழுத்து வாங்கிக் கொண்டு அட்டையைக் கையில் கொடுத்து, ‘தொலைடா சாமி’ என்று அனுப்பி வைத்தார்கள். விஷயம் இத்தோடு முடிந்துவிடுமா, என்ன? பின்னர் ஒரு நாள், நான் அட்டையின் ரகசியக் குறியீட்டை மாற்ற எண்ணி, இயந்திரத்தில் அட்டையைச் செலுத்தி, அவர்கள் எனக்களித்திருந்த மூல மந்திரச் சொல்லைப் பயன்படுத்தினதும், ‘உன் அட்டையை ஏற்க மாட்டேன்’ என்று சொல்லிவிட்டது. இப்போது மீண்டும் மனந்தளராத விக்ரமாதித்யனாக நான்.....!

(அன்றைய என்னுடைய கலாட்டாவின்போதும் வங்கி மேலாளர் அங்கிருக்கவில்லை!)