Saturday, August 4, 2012

ஒரு Perfect மெலடி!

     இந்தப் பாடலை முதல் முறை கேட்கும்போது, ஜமுனாராணியின் குரலும், துணையாக வரும் தபலாவும் மட்டும் உங்கள் கவனத்தைக் கவர்ந்து, உயிரை ஆக்ரமித்துக் கொண்டுவிடும். பின்னர், அதனின்று ஒருவழியாக விடுபட்டுக் கவனித்தோமானால் மட்டுமே, வயலின், மாண்டலின், மகுடி, டபிள்பேஸ் போன்ற இன்னபிற வாத்தியங்களும் கவனத்துக்கு வரும்!

     எத்தனை வாத்தியங்கள் இருந்தாலும் அவற்றை சுவாரஸ்யமாகக் கோர்க்கும் வித்தையில் (மெல்லிசை) மன்னர்களுக்கு நிகரேது?

     1957ல் வெளிவந்த ‘மகாதேவி’ திரைப்படத்தில் பட்டுக்கோட்டையின் எழுத்தில், ஜமுனாராணியின் ஒரு சோகமான Perfect மெலடியை, இன்றைய இசையமைப்பாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடத்தை, ரசிக்கலாம் வாருங்கள்!