நண்பர்களே,
இன்று நாம் பார்க்கவிருக்கும் விடியோ, ஜெர்மனியில்,ட்ரெஸ்டன் என்ற ஊரில் இருக்கும் ஒரு தொழிற்சாலையைப் பற்றியது.அங்கே,‘வோக்ஸ்வாகன்’ என்ற உலகப் புகழ் பெற்ற கார் எப்படித் தயாரிக்கப் படுகிறது என்பதை விளக்குகிறது. ஒரு நவீன ஆர்ட் காலரி போலத் தோற்றும் இந்தத் தொழிற்சாலை, எவ்வளவு சுத்தமாக வைக்கப் பட்டிருக்கிறது என்பதைக் கவனிக்கத் தவறாதீர்கள். யார் வேண்டுமானாலும் சென்று பார்க்க முடியும் அந்த தொழிற்சாலையைப் பார்க்கலாமா?
Sunday, January 15, 2012
Saturday, January 14, 2012
பெண்டுலங்களின் நாட்டியம்!
நண்பர்களே!
மென் கலைகளிலிருந்து சற்றே விலகி, கண்களுக்கு விருந்தான ஒரு பௌதிகப் பரிசோதனையைப் பார்க்கலாமா?
சுவர்க் கடிகாரங்களில் எப்போதும் ஆடிக்கொண்டிருக்கும் பெண்டுலங்களை எல்லோரும் பார்த்திருக்கிறோம். அதையே வெவ்வேறு நீளங்களில் அமைத்துச் செய்யப்பட்ட ஒரு அழகான சோதனைதான் இது. உங்கள் ரசனைக்காக இதோ:
மென் கலைகளிலிருந்து சற்றே விலகி, கண்களுக்கு விருந்தான ஒரு பௌதிகப் பரிசோதனையைப் பார்க்கலாமா?
சுவர்க் கடிகாரங்களில் எப்போதும் ஆடிக்கொண்டிருக்கும் பெண்டுலங்களை எல்லோரும் பார்த்திருக்கிறோம். அதையே வெவ்வேறு நீளங்களில் அமைத்துச் செய்யப்பட்ட ஒரு அழகான சோதனைதான் இது. உங்கள் ரசனைக்காக இதோ:
கடவுளும் மனிதனும்!
கடவுள் படைத்த மனிதன் தனது ஆறறிவினால் உலகத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறான். அவனுடைய வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகளில் ஒன்று புகைப்படக்கலை. இந்தப் பதிவின் மூலமாக நாம் ஏற்கனவே சில (’மாக்ரோ’ எனப்படும்) மிக அண்மைப் படங்களைக் கண்டோம்.(காண்க: நீர்த்துளியும் புகைப்படமும் பகுதி 1 & 2). இன்று, உங்களுக்கு ஒரு விடியோவை அறிமுகம் செய்யவிருக்கிறேன்.
இதில் என்ன விசேஷம்? மகரந்தச்சேர்க்கை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். கூட்டுப் புழுவிலிருந்து பட்டாம்பூச்சி உருவாவதும் தெரியும். வௌவால் மலர்களிலிருந்து தேன் உறிஞ்சுவதைப் பார்த்திருக்கிறீர்களா? காய்கள் கனியாவதை மிக அருகிலிருந்து ரசித்திருக்கிறீர்களா? இவை அனைத்தையும் மட்டுமின்றி இன்னும் பல காட்சிகளையும் இந்த மாக்ரோ விடியோ உங்களுக்குத் தந்து, உங்களை வியப்பின் உச்சிக்கே கொண்டுசெல்லப் போகிறது! வாருங்கள், இந்த உலகம் எவ்வளவு அழகானது என்பதையும், நாம் ஏன் அதை பாதுகாக்க வேண்டுமென்பதையும் அறிந்து கொள்வோம்!
இதில் என்ன விசேஷம்? மகரந்தச்சேர்க்கை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். கூட்டுப் புழுவிலிருந்து பட்டாம்பூச்சி உருவாவதும் தெரியும். வௌவால் மலர்களிலிருந்து தேன் உறிஞ்சுவதைப் பார்த்திருக்கிறீர்களா? காய்கள் கனியாவதை மிக அருகிலிருந்து ரசித்திருக்கிறீர்களா? இவை அனைத்தையும் மட்டுமின்றி இன்னும் பல காட்சிகளையும் இந்த மாக்ரோ விடியோ உங்களுக்குத் தந்து, உங்களை வியப்பின் உச்சிக்கே கொண்டுசெல்லப் போகிறது! வாருங்கள், இந்த உலகம் எவ்வளவு அழகானது என்பதையும், நாம் ஏன் அதை பாதுகாக்க வேண்டுமென்பதையும் அறிந்து கொள்வோம்!
Wednesday, January 11, 2012
மதுரை மீனாக்ஷி கோவில் - ஒரு 360 டிகிரி பனோரமா!
ஆல் இந்தியா ரேடியோவில் ஒரு நிகழ்ச்சியை நேரடி ஒலிபரப்பு செய்யும்போது, ‘நேயர்களே, இப்போது உங்களை (திருவையாறுக்கு) அழைத்துச் செல்கிறோம்’ என்று அறிவிப்பார்கள்! அது போல, உங்களை இன்று நான், மதுரை மீனாக்ஷி கோவிலுக்கு அழைத்துச் சென்று, கோவில் முழுவதையும் சுற்றிக்காட்டப் போகிறேன்!
கீழே உள்ள உரலியை உங்கள் கணினியில் மறு பதிவு (copy, paste) செய்து சொடுக்கினால், நீங்கள் அந்தக் கோவிலுக்குள் இருப்பீர்கள்! ஆமாம்,நண்பர்களே, இதுவும் ஒரு 360 டிகிரி பனோரமா படம். இதில் இன்னொரு விசேஷம், உங்கள் mouse தனை, நீங்கள் அசைக்கும் திசை எல்லாம் (அதாவது, பக்கவாட்டில் மட்டுமின்றி, மேலேயும் கீழேயும்) என்ன இருக்கிறதோ அதை எல்லாம் பார்க்க முடியும். தனியே, மேலே இடது மூலையில் Lay out என்ற இடத்தில் சொடுக்கினால், கோவிலில் நீங்கள் விரும்பும் இடங்களுக்கு எல்லாம் ஒரு சொடுக்கில் செல்லலாம். கூடவே,அருமையான (த்வஜாவந்தி எனும் ராகத்தில், க்ளாரிநெட் வாத்தியத்தில்) ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி என்னும் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் கீர்த்தனையும் துணைவரும்! முக்கியமாக, மேல் விதானங்களில் இருக்கும் சித்திரங்களைப் பார்க்கத் தவறாதீர்கள்.
இத்தகைய சுற்றுலாவுக்கு, VIRTUAL TOUR என்று சொல்வார்கள். இப்போது இந்த புது அனுபவத்தைக் காண உங்களை மதுரை மீனாக்ஷி கோவிலுக்கு அழைத்துச் செல்கிறேன்!
view360.in/virtualtour/madurai/
கீழே உள்ள உரலியை உங்கள் கணினியில் மறு பதிவு (copy, paste) செய்து சொடுக்கினால், நீங்கள் அந்தக் கோவிலுக்குள் இருப்பீர்கள்! ஆமாம்,நண்பர்களே, இதுவும் ஒரு 360 டிகிரி பனோரமா படம். இதில் இன்னொரு விசேஷம், உங்கள் mouse தனை, நீங்கள் அசைக்கும் திசை எல்லாம் (அதாவது, பக்கவாட்டில் மட்டுமின்றி, மேலேயும் கீழேயும்) என்ன இருக்கிறதோ அதை எல்லாம் பார்க்க முடியும். தனியே, மேலே இடது மூலையில் Lay out என்ற இடத்தில் சொடுக்கினால், கோவிலில் நீங்கள் விரும்பும் இடங்களுக்கு எல்லாம் ஒரு சொடுக்கில் செல்லலாம். கூடவே,அருமையான (த்வஜாவந்தி எனும் ராகத்தில், க்ளாரிநெட் வாத்தியத்தில்) ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி என்னும் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் கீர்த்தனையும் துணைவரும்! முக்கியமாக, மேல் விதானங்களில் இருக்கும் சித்திரங்களைப் பார்க்கத் தவறாதீர்கள்.
இத்தகைய சுற்றுலாவுக்கு, VIRTUAL TOUR என்று சொல்வார்கள். இப்போது இந்த புது அனுபவத்தைக் காண உங்களை மதுரை மீனாக்ஷி கோவிலுக்கு அழைத்துச் செல்கிறேன்!
view360.in/virtualtour/madurai/
Labels:
Madurai Meenakshi temple,
Panorama,
Virtual tour
Tuesday, January 10, 2012
லண்டன் பனோரமா!
புகைப் படங்கள் எனும்போது, நமக்குத் தெரிந்ததெல்லாம் கருப்பு-வெள்ளை அல்லது வண்ணம் என்பதே. இப்போது கணினிகள் காலம்! எங்கள் காலத்தில் இருட்டறையில் மணிக்கணக்கில் நாங்கள் செய்தவற்றைத் தவிர, சாதாரணம், மிகு அடர்த்தி என்று பிலிம் இல்லாமல் என்ன வேன்ண்டுமானாலும் ஒரு சொடுக்கில் செய்ய முடிகிறது. இந்தத் தொழில் நுட்பத்தில் (panorama)எனப்படும் 360 டிகிரி (அதாவது முழு வட்ட திசைகளில்) நாம் பார்ப்பவைகளை எல்லாம் ஒரே படத்தில் கொண்டுவந்து, உங்கள் கணினியின் எலி (mouse!) மூலமாக நாம் பார்க்கும் வேகத்தையும் கட்டுப் படுத்தி படத்தை அனுபவிக்க முடிகிறது. அனேகமாக எல்லா ஐரோப்பிய சுற்றுலாத்தளங்களுக்கும் இத்தகைய படங்கள் வலையில் கிடைக்கின்றன. இன்று நான் உங்களுக்குத் தருவது லண்டன் மாநகரத்தின்
மிகுஅடர்த்தி பனோரமா. கீழே கொடுத்திருக்கும் வலைத்தளத்தைச் சொடுக்கினால் நீங்கள் அனுபவிக்கலாம்.
London in Detail | Gigapixel London Panorama | London Photographer
மிகுஅடர்த்தி பனோரமா. கீழே கொடுத்திருக்கும் வலைத்தளத்தைச் சொடுக்கினால் நீங்கள் அனுபவிக்கலாம்.
London in Detail | Gigapixel London Panorama | London Photographer
Sunday, January 8, 2012
அல்லூரில் திரு ஆதிரை!
Friday, January 6, 2012
ஒரு புதிய கலை!
”கொம்பிலே பழம் பழுத்துத் தொங்குறதும் கலை,
லவ்விலே மனம் மயங்கிப் பொங்குறதும் கலை,
வீதியிலே கர்ணம் போட்டு ஆடுறதும் கலை,
மேடையிலே குந்திக்கிட்டுப் பாடுறதும் கலை” என்று
சந்திரபாபுவின் குரல் மூலம் ‘பதிபக்தி’ படத்தில் சொன்னவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்! அதாவது, கலையின் வடிவங்கள் எண்ணிறந்தவை. மேல் நாடுகளில் அப்படிப்பட்ட கலைகளில் ஒன்றுதான் 'BOOK CARVING' என்பது. பழைய, பெரிய புத்தகங்களைக் கலையழகோடு ’குடைந்து’ தயார் செய்யும் ஒரு சிற்ப வடிவம். அத்தகைய வடிவங்களில் பொறுக்கியெடுத்த ஐந்து சிற்பங்களின் படத்தைப் பார்த்து வியக்கலாம், வாருங்கள்,நண்பர்களே! படங்களின் மேலே சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்.




லவ்விலே மனம் மயங்கிப் பொங்குறதும் கலை,
வீதியிலே கர்ணம் போட்டு ஆடுறதும் கலை,
மேடையிலே குந்திக்கிட்டுப் பாடுறதும் கலை” என்று
சந்திரபாபுவின் குரல் மூலம் ‘பதிபக்தி’ படத்தில் சொன்னவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்! அதாவது, கலையின் வடிவங்கள் எண்ணிறந்தவை. மேல் நாடுகளில் அப்படிப்பட்ட கலைகளில் ஒன்றுதான் 'BOOK CARVING' என்பது. பழைய, பெரிய புத்தகங்களைக் கலையழகோடு ’குடைந்து’ தயார் செய்யும் ஒரு சிற்ப வடிவம். அத்தகைய வடிவங்களில் பொறுக்கியெடுத்த ஐந்து சிற்பங்களின் படத்தைப் பார்த்து வியக்கலாம், வாருங்கள்,நண்பர்களே! படங்களின் மேலே சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்.





Subscribe to:
Posts (Atom)