Tuesday, August 30, 2011
கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (நான்கு)
உங்களுக்கும் எனக்கும் இன்றைய தினம் ஆனந்தமான நாளாக மலரப் போகிறது! இன்று நாம் ரசிக்கவிருக்கும் பாடல் அத்தகையது!
தலைவியின் மனதிற்கேற்ப அவளின் காதல் கைகூடினால், பெரும் மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் தவிர வேறென்ன உணருவாள்? அந்த உணர்ச்சிகளை அப்படியே கொணர்ந்து மெல்லிசை மன்னர்கள் இந்தப் பாடலுக்கு எக்ஸ்பிரஸ் வேகத்தில் இசை அமைத்திருக்கிறார்கள். அதன் முழுப் பரிமாணமாக, பாடல் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை வயலின்களும், பியானோவும், டோலக்கும், தபலாவும், எல்லாவற்றிற்கும் சிகரமாக சுசீலாவின் தேன் குரலும் நம் உயிரைச் சுண்டி இழுக்கிறது பாருங்கள், அதுதான் இந்தப் பாடலின் வெற்றி.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய இப் பாடல் ‘தங்கப் பதுமை’ திரைப்படத்தில் வருகிறது. (இதே படத்தில் பிரபலமான இன்னும் இரு பாடல்கள்: டி.எம்.எஸ்-ஜிக்கி பாடியிருக்கும் ’இன்று நமதுள்ளமே’ மற்றும் சிதம்பரம் ஜெயராமன் பாடி, பத்மினி இடையே பேசியிருக்கும் ‘ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே”).
’என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன்’ என்கிற இந்தப்பாடல், படத்தில் இன்னொரு முறை நெஞ்சைப் பிழியும் சோகத்தோடும் ஒலிக்கும்! அதையும் சுசீலாதான் பாடியிருக்கிறார். நான் தெரிவு செய்திருப்பது (இசைக் கோர்வைக்காக) மகிழ்ச்சியான பாடல். அதன் ஆரம்பத்திலும், சரணங்களின் இடையிலும் வரும் வயலின்களின் விளையாட்டையும், அதற்குப் பியானோவின் ‘கார்டுகள்’ (Chords) தரும் அரவணைப்பையும், இரண்டாவது சரணத்தின் முன்னிசையில், வயலின்கள் மற்றும் பியானோவோடு பின்னால் புல்லாங்குழல் இசை பின்னிப் பிணைந்து கொண்டு வருவதையும் தவற விட்டு விடாதீர்கள்! இப்போது பாடல் இதோ:
En vaazhvil pudhup paadhai by Krishnamurthy80
மீண்டும் சந்திப்போமா, நண்பர்களே?
Friday, August 26, 2011
கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்!
(மூன்று)
ஓரு இனிமையான செய்தி! கடந்த இரு பதிவுகளுக்கான பாடல்களின் ஒலிப்பதிவுகள் அந்தந்தப் பதிவுகளில் இணைக்கப் பட்டிருக்கின்றன. இனி வரும் பாடல்களுக்கும் இணைப்பு (கிடைத்த வரை!) உண்டு. கேட்டு மகிழுங்கள்.
நான் முதலில் குறிப்பிட்டிருந்ததைப் போன்ற சூழ்நிலையில் கேட்டால் இன்னும் இனிக்கும். நல்ல கருவிகளில் கேட்கும் போதுதான், அற்றை நாளிலேயே, (அதாவது, இன்று போல நவீன ஒலிப்பதிவுக் கருவிகள், கணினிகள் இல்லாத போதிலேயே) நமது ஒலிப்பதிவாளர்கள் எவ்வளவு அருமையாகப் பாடல்களை ஒலிப்பதிவு செய்திருக்கிறார்கள் என்பதும் தெரியும். உதாரணமாக, பல பாடல்களில் டபிள் பேஸ் என்கிற (மகா பெரிய வயலினைப் போல இருக்கும் இதை, நின்று கொண்டு தான் இசைப்பார்கள்) வாத்தியத்தை தாளத்திற்கேற்பவும், அந்தந்த ஸ்வரத்திற்கேற்பவும் மீட்டியிருப்பார்கள். உங்கள் காதுகளில், அதன் தொனி ‘தொம், தொம்’ என்று தாளத்தோடு அதிரும்! பாடலில் இசைக்கப்பட்டிருக்கும் எல்லா வாத்தியங்களின் தொனியும் செவிகளில் அளவாக, அமுதமாக விழும். ஆனாலும் எந்த வாத்தியமும் பாடுபவரின் குரலையோ, உச்சரிப்பையோ என்றும் அமுக்கியதே இல்லை!
இன்னொன்று! நான் இணைத்திருக்கும் சில பாடல்களின் ஒலிப்பதிவு, மெச்சத்தகுந்ததாக இல்லை என்றால், அது என் ஒலிப்பதிவு அல்லது இணைப்பின் குறையே!
-0-
இனி இன்றைய பாடல்: ’மாலையிட்ட மங்கை’ படத்தில் என்னைக் கவர்ந்த மூன்றாவது பாடல், ‘நானன்றி யார் வருவார்?’. இந்தப் பாடலை, டி.ஆர்.மகாலிங்கமும், ஏ.பி. கோமளாவும் பாடியிருக்கிறார்கள். பாடல், ’ஆபோகி‘ என்கிற கர்நாடக சங்கீத ராகத்தில் அமைந்திருக்கிறது. (இதே ராகத்தில் அமைந்த இன்னொரு பாடல் மெல்லிசை மன்னர்கள் இசையில், ‘கலைக்கோவில்’ படத்தில் வந்த, பாலமுரளீகிருஷ்ணாவும் சுசீலாவும் பாடிப் பிரபலமான ‘தங்கரதம் வந்தது வீதியிலே’. இளையராஜாவும், இதே ராகத்தில் ‘இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ’ என்று ஒரு பாடல் போட்டிருக்கிறார்).
இந்தப் பாடலின் சிறப்பு என்ன? நீங்கள் டி.ஆர்.மகாலிங்கம் பாடிய பல பாடல்களைக் கேட்டிருப்பீர்கள். நாடக மேடையிலிருந்து வந்தவர் என்பதால் கணீர்க் குரலில் உச்சஸ்தாயியில் பாடும் வழக்கம் உள்ளவர். (கூர்ந்து கவனித்திருந்தீர்களானால், ‘செந்தமிழ்த் தேன் மொழியாள்’ பாடல் கூட, கணீரென்றுதான் இருக்கும்!) ஆனால், இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். அவரை, மென்மையான குரலில் எவ்வளவு அழகாகப் பாட வைத்திருக்கிறார்கள் என்பதை! மனதைத் தழுவி, உள்ளே புகுந்து பாடலோடு ஒன்றச் செய்யும் வித்தை அது!
உடன் பாடியிருக்கும் ஏ.பி.கோமளா பழைய பாடகி. அருமையான குரல் வளம் கொண்டவர். ஸி.ஆர்.சுப்பராமன், ஜி.ராமநாதன், போன்ற அனைத்துப் பழம்பெரும் இசையமைப்பாளர்களிடமும் நிறையப் பாடியிருக்கிறார். (சிவாஜி நடித்த ’நான் பெற்ற செல்வம்’ படத்தில் ‘மாதா, பிதா, குரு தெய்வம்’ என்ற அருமையான பாடலைப் பாடியிருப்பார், கேட்டதுண்டோ?). நான் இன்னமும் விவரிப்பதை விட, நீங்கள் இந்தப் பாடலைக் கேட்கும் போது தானே உங்களுக்குப் புரியும்.
இப்போது பாடலைக் கேட்கலாமா?
Naanandri yaar varuvaar? by Krishnamurthy80
மீண்டும் இன்னொரு பாடல் மூலமாகச் சந்திப்போம், நண்பர்களே!
ஓரு இனிமையான செய்தி! கடந்த இரு பதிவுகளுக்கான பாடல்களின் ஒலிப்பதிவுகள் அந்தந்தப் பதிவுகளில் இணைக்கப் பட்டிருக்கின்றன. இனி வரும் பாடல்களுக்கும் இணைப்பு (கிடைத்த வரை!) உண்டு. கேட்டு மகிழுங்கள்.
நான் முதலில் குறிப்பிட்டிருந்ததைப் போன்ற சூழ்நிலையில் கேட்டால் இன்னும் இனிக்கும். நல்ல கருவிகளில் கேட்கும் போதுதான், அற்றை நாளிலேயே, (அதாவது, இன்று போல நவீன ஒலிப்பதிவுக் கருவிகள், கணினிகள் இல்லாத போதிலேயே) நமது ஒலிப்பதிவாளர்கள் எவ்வளவு அருமையாகப் பாடல்களை ஒலிப்பதிவு செய்திருக்கிறார்கள் என்பதும் தெரியும். உதாரணமாக, பல பாடல்களில் டபிள் பேஸ் என்கிற (மகா பெரிய வயலினைப் போல இருக்கும் இதை, நின்று கொண்டு தான் இசைப்பார்கள்) வாத்தியத்தை தாளத்திற்கேற்பவும், அந்தந்த ஸ்வரத்திற்கேற்பவும் மீட்டியிருப்பார்கள். உங்கள் காதுகளில், அதன் தொனி ‘தொம், தொம்’ என்று தாளத்தோடு அதிரும்! பாடலில் இசைக்கப்பட்டிருக்கும் எல்லா வாத்தியங்களின் தொனியும் செவிகளில் அளவாக, அமுதமாக விழும். ஆனாலும் எந்த வாத்தியமும் பாடுபவரின் குரலையோ, உச்சரிப்பையோ என்றும் அமுக்கியதே இல்லை!
இன்னொன்று! நான் இணைத்திருக்கும் சில பாடல்களின் ஒலிப்பதிவு, மெச்சத்தகுந்ததாக இல்லை என்றால், அது என் ஒலிப்பதிவு அல்லது இணைப்பின் குறையே!
-0-
இனி இன்றைய பாடல்: ’மாலையிட்ட மங்கை’ படத்தில் என்னைக் கவர்ந்த மூன்றாவது பாடல், ‘நானன்றி யார் வருவார்?’. இந்தப் பாடலை, டி.ஆர்.மகாலிங்கமும், ஏ.பி. கோமளாவும் பாடியிருக்கிறார்கள். பாடல், ’ஆபோகி‘ என்கிற கர்நாடக சங்கீத ராகத்தில் அமைந்திருக்கிறது. (இதே ராகத்தில் அமைந்த இன்னொரு பாடல் மெல்லிசை மன்னர்கள் இசையில், ‘கலைக்கோவில்’ படத்தில் வந்த, பாலமுரளீகிருஷ்ணாவும் சுசீலாவும் பாடிப் பிரபலமான ‘தங்கரதம் வந்தது வீதியிலே’. இளையராஜாவும், இதே ராகத்தில் ‘இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ’ என்று ஒரு பாடல் போட்டிருக்கிறார்).
இந்தப் பாடலின் சிறப்பு என்ன? நீங்கள் டி.ஆர்.மகாலிங்கம் பாடிய பல பாடல்களைக் கேட்டிருப்பீர்கள். நாடக மேடையிலிருந்து வந்தவர் என்பதால் கணீர்க் குரலில் உச்சஸ்தாயியில் பாடும் வழக்கம் உள்ளவர். (கூர்ந்து கவனித்திருந்தீர்களானால், ‘செந்தமிழ்த் தேன் மொழியாள்’ பாடல் கூட, கணீரென்றுதான் இருக்கும்!) ஆனால், இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். அவரை, மென்மையான குரலில் எவ்வளவு அழகாகப் பாட வைத்திருக்கிறார்கள் என்பதை! மனதைத் தழுவி, உள்ளே புகுந்து பாடலோடு ஒன்றச் செய்யும் வித்தை அது!
உடன் பாடியிருக்கும் ஏ.பி.கோமளா பழைய பாடகி. அருமையான குரல் வளம் கொண்டவர். ஸி.ஆர்.சுப்பராமன், ஜி.ராமநாதன், போன்ற அனைத்துப் பழம்பெரும் இசையமைப்பாளர்களிடமும் நிறையப் பாடியிருக்கிறார். (சிவாஜி நடித்த ’நான் பெற்ற செல்வம்’ படத்தில் ‘மாதா, பிதா, குரு தெய்வம்’ என்ற அருமையான பாடலைப் பாடியிருப்பார், கேட்டதுண்டோ?). நான் இன்னமும் விவரிப்பதை விட, நீங்கள் இந்தப் பாடலைக் கேட்கும் போது தானே உங்களுக்குப் புரியும்.
இப்போது பாடலைக் கேட்கலாமா?
Naanandri yaar varuvaar? by Krishnamurthy80
மீண்டும் இன்னொரு பாடல் மூலமாகச் சந்திப்போம், நண்பர்களே!
Labels:
A.P.கோமளா,
T.R.மகாலிங்கம்,
கண்ணதாசன்,
மெல்லிசை மன்னர்கள்
Monday, August 22, 2011
கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்!(இரண்டு)
கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தது போல, எனது ரசனையில் இரண்டாவது பாடலும் கவியரசரின் மாலையிட்ட மங்கை படத்திலிருந்து தான். கவியரசரின் இந்தப்பாடலை, மெல்லிசைமன்னர்களின் இசையில் ஜமுனாராணி பாடியிருக்கிறார்.
’மாலையிட்டு மணமுடித்து பொட்டு வச்சு, பூ முடிச்சு
மங்கை இவள் வாழ வந்தாள் எங்கள் வீட்டிலே!
மாலை வெயில் போலே மஞ்சள் பூசும் பெண்ணை
வாழ வைக்க மகன் வருவான், கொஞ்ச நாளிலே!’
இந்தப் பாடலைப் பாடிய ஜமுனாராணி (பானுமதியைப் போல ஒரு வித்தியாசமான குரல் இவருக்கு!) மணமகளை வரவேற்கவும், நையாண்டி செய்யவும் கூடிய உணர்ச்சியை வார்த்தைகளில் வெளிப்படுத்தி, அழகாகப் பாடியிருப்பார். பின்னணியில், தாளமும் மற்ற தோழிகளின் குரல்களும் அதற்கு அருமையாகத் துணை போகும். ஆனாலும், கதைப்படி, அந்த மகிழ்ச்சி அந்த மணமகளுக்குக் கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்த்தும் விதமாக மகா சோகத்துடன் ஒரு ஷெனாய் பீஸும் பாடலுக்கு முன்னரும் இடையிலும் ஒலிக்கும்!
இரு வேறு உணர்ச்சிகளை உள்ளடக்கி, கவியரசரும், மன்னர்களும் உருவாக்கிய இப்பாடல், ஒரு நல்ல பாடலுக்கு ஆரவாரமான இசை தேவையில்லை என்பதையே உறுதிப்படுத்துகிறது. பாடகியின் குரலும், மாண்டலினும் ஷெனாயும் கேட்கும் போதெல்லாம் சொக்க வைக்கும்! அநுபவியுங்கள், அடுத்த பாடல் வரும் வரை!
Malaiyittu manamudiththu by Krishnamurthy80
Labels:
கண்ணதாசன்,
விஸ்வநாதன் - ராமமூர்த்தி,
ஜமுனாராணி
Wednesday, August 17, 2011
கொஞ்சும் இசையும் கொஞ்சம் ரசனையும்!
பழந்தமிழ்த்திரை இசை பற்றி அடிக்கடி இங்கே அலசலாம் என்கிற உத்தேசம்.அதாவது, (கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளையும் விஞ்சியதாகத் தானே சொல்லிக்கொண்டிருக்கும்) திரு. இளையராஜா அவர்களின் காலத்துக்கு முன்னர் வாழ்ந்து எத்தனையோ இறவாப்பாடல்களை உருவாக்கி, சத்தமே இல்லாமல் சாதனைகள் பல செய்து போனவர்களைப்பற்றி அல்ல, அவர்கள் உருவாக்கிய சில அபூர்வமான, அற்புதமான பாடல்கள் பற்றிப் பேசப்போகிறோம். இதில் பாடல்களைப் பற்றிப் பேசப்போவது குறைவு. ரசிக்கப் போவதுதான் அதிகம். அதுதான் இந்தப் பதிவின் குறிக்கோளும் கூட.
ரசனை என்பது எல்லை கடந்தது. இதில்,பாடல்களை ரசிப்பதில் நம் போல யாருமில்லை. இன்றைய தினத்தில் வேண்டியதெல்லாம் ஒரு கைப் பேசி மட்டுமே.. ஒரே பேருந்தில் நான்கைந்து பாடல்கள் அலறிக்கொண்டிருக்கும்! யார் அதிகமான சத்ததை உலவவிடுகிறார்கள் என்று ஒரு அறிவிக்கப் படாத போட்டி! இதன் தலையாய சோகம், இன்றைய திரைப்பாடல்களும் ரசிப்பதற்காக உருவாக்கப் பட்டவைகள் என்று சொல்லமுடியாது. தப்புத் தாளத்தை (தப்பு என்கிற தாள வாத்தியம்) அடிப்படையாக வைத்தே எல்லா மெட்டுகளும் இருக்கின்றன. ‘மச்சானைப் பார்த்தீங்களா’ என்று இளையராஜா ஆரம்பித்து வைக்க, ‘ஒட்டகத்தைக் கட்டிக்கோ’ என்று ரஹ்மான் பின் தொடர, இன்று படத்திற்கு நான்கு பாடல்களாவது அந்த வகைதான்! மெலடி என்று கூறப்படும் மீதி இரண்டு பாடல்களும் (பெரும்பாலானவை) மனதில் நிற்பதில்லை என்பதுதான் நிதரிசனம்.
பாடல்களுக்குப் போகுமுன், அதிகபட்ச ரசனைக்காகச் சில முன்னேற்பாடுகள் தேவை. நான் சிபாரிசு செய்யும் பாடல்களை, (கூடியமட்டிலும்) இரவில், தனிமையில் கேளுங்கள். ஒரு நல்ல ஒலி பெருக்கியில், மிதமான ஒலி அளவில், அல்லது இன்றிருக்கும் கைப் பேசி/ஐ-பாட்டில் (காதுகளுக்குள் கருவியைப் பொருத்தி) இதமான ஒலி அளவில் கேட்டுப் பாருங்கள். இதை நான் கூறவில்லை. திரு.சுஜாதா அவர்கள் சொன்னது. இப்படிக் கேட்டால், பாடல்கள் முடிந்தவுடன் ‘ஐயோ, முடிந்துவிட்டதே’ என்றிருக்கும்! 1950 முதல் 1980 களின் பாடல்கள் இன்றும்கூட அதிகமாக விரும்பிக் கேட்கப்படுபவை. இவைகளிலும் பொறுக்கியெடுத்த சில பாடல்களை உங்களுக்கு அறிமுகம் செய்யவிருக்கிறேன். தேடிப் பிடித்து, கேட்டு அனுபவித்து, யான் பெற்ற(றுக்கொண்டிருக்கும்!) இன்பம், பெறுக இவ்வையகம்!
மாலையிட்ட மங்கை என்ற படத்திற்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை. அதில் வரும் ‘செந்தமிழ்த் தேன் மொழியாள்’ என்கிற பாடலை ஒலிபரப்பாத ஒலிக்கருவியே தமிழ்நாட்டில் இல்லை எனலாம்! அதன் பல்லவி(மட்டும்), ஒரு இந்திப் படத்தில் திரு.நெளஷாத் உருவாக்கிய பாடலின் பிரதி. ஆனாலும் நாம் ரசிக்கப் போவது அந்தப் பாடல் இல்லை. அதே படத்திலிருந்து வேறு மூன்று பாடல்கள். அதில் முதலாவதாக வருவது, எம்.எஸ்.ராஜேஸ்வரி, தன் இனிமையான குழந்தைக் குரலில் பாடியிருக்கும்
‘மழைகூட ஒரு நாளில் தேனாகலாம்,
மணல் கூட சில நாளில் பொன்னாகலாம்,
ஆனாலும் அவையாவும் நீ யாகுமா,
அம்மா என்றைழைக்கின்ற சேயாகுமா!’ என்கிற தாலாட்டைக் கேளுங்கள்.
மனதை வருடும் இசை. குழைவான குரலுக்கிசைந்த வீணை, புல்லாங்குழல், இரண்டு தாள வாத்தியங்கள் மற்றும் கண்ணதாசனின் வரிகள் – இவ்வளவு தான் மொத்தமுமே! விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் ஏராளமான பாடல்கள் (‘ஆர்கெஸ்ட்ரேஷன்’ எனப்படும்) நிறைய வாத்தியங்களின் இசைக் கோர்வைக்குப் பெயர் போனவை.(இங்கே புதிய பறவை படத்திலிருந்து ’எங்கே நிம்மதி’ நினைவுக்கு வருகிறது) அவர்களிடமிருந்து இத்தகைய அமைதியான பாடல்கள் பல வந்திருக்கின்றன என்பதுதான் அவர்களைச் சிறந்த இசையமைப்பாளர்களாக்குகிறது. இந்தக் காவியத்துக்கு கவியரசின் வரிகள் ஒரு மகுடம்.
நான் கூறிய சூழ்நிலையில் இந்தப் பாடலைக் கேட்டு ரசியுங்கள் – இசையின் தாக்கம் என்னவென்பது உங்களுக்கு மேலும் புரியும்! மீண்டும் அடுத்த பாடலைப் பார்க்கும் முன், இந்தப் பாடலைக் கேளுங்கள்:
29 MAZHAI KOODA INH100310630 by Krishnamurthy80
ரசனை என்பது எல்லை கடந்தது. இதில்,பாடல்களை ரசிப்பதில் நம் போல யாருமில்லை. இன்றைய தினத்தில் வேண்டியதெல்லாம் ஒரு கைப் பேசி மட்டுமே.. ஒரே பேருந்தில் நான்கைந்து பாடல்கள் அலறிக்கொண்டிருக்கும்! யார் அதிகமான சத்ததை உலவவிடுகிறார்கள் என்று ஒரு அறிவிக்கப் படாத போட்டி! இதன் தலையாய சோகம், இன்றைய திரைப்பாடல்களும் ரசிப்பதற்காக உருவாக்கப் பட்டவைகள் என்று சொல்லமுடியாது. தப்புத் தாளத்தை (தப்பு என்கிற தாள வாத்தியம்) அடிப்படையாக வைத்தே எல்லா மெட்டுகளும் இருக்கின்றன. ‘மச்சானைப் பார்த்தீங்களா’ என்று இளையராஜா ஆரம்பித்து வைக்க, ‘ஒட்டகத்தைக் கட்டிக்கோ’ என்று ரஹ்மான் பின் தொடர, இன்று படத்திற்கு நான்கு பாடல்களாவது அந்த வகைதான்! மெலடி என்று கூறப்படும் மீதி இரண்டு பாடல்களும் (பெரும்பாலானவை) மனதில் நிற்பதில்லை என்பதுதான் நிதரிசனம்.
பாடல்களுக்குப் போகுமுன், அதிகபட்ச ரசனைக்காகச் சில முன்னேற்பாடுகள் தேவை. நான் சிபாரிசு செய்யும் பாடல்களை, (கூடியமட்டிலும்) இரவில், தனிமையில் கேளுங்கள். ஒரு நல்ல ஒலி பெருக்கியில், மிதமான ஒலி அளவில், அல்லது இன்றிருக்கும் கைப் பேசி/ஐ-பாட்டில் (காதுகளுக்குள் கருவியைப் பொருத்தி) இதமான ஒலி அளவில் கேட்டுப் பாருங்கள். இதை நான் கூறவில்லை. திரு.சுஜாதா அவர்கள் சொன்னது. இப்படிக் கேட்டால், பாடல்கள் முடிந்தவுடன் ‘ஐயோ, முடிந்துவிட்டதே’ என்றிருக்கும்! 1950 முதல் 1980 களின் பாடல்கள் இன்றும்கூட அதிகமாக விரும்பிக் கேட்கப்படுபவை. இவைகளிலும் பொறுக்கியெடுத்த சில பாடல்களை உங்களுக்கு அறிமுகம் செய்யவிருக்கிறேன். தேடிப் பிடித்து, கேட்டு அனுபவித்து, யான் பெற்ற(றுக்கொண்டிருக்கும்!) இன்பம், பெறுக இவ்வையகம்!
மாலையிட்ட மங்கை என்ற படத்திற்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை. அதில் வரும் ‘செந்தமிழ்த் தேன் மொழியாள்’ என்கிற பாடலை ஒலிபரப்பாத ஒலிக்கருவியே தமிழ்நாட்டில் இல்லை எனலாம்! அதன் பல்லவி(மட்டும்), ஒரு இந்திப் படத்தில் திரு.நெளஷாத் உருவாக்கிய பாடலின் பிரதி. ஆனாலும் நாம் ரசிக்கப் போவது அந்தப் பாடல் இல்லை. அதே படத்திலிருந்து வேறு மூன்று பாடல்கள். அதில் முதலாவதாக வருவது, எம்.எஸ்.ராஜேஸ்வரி, தன் இனிமையான குழந்தைக் குரலில் பாடியிருக்கும்
‘மழைகூட ஒரு நாளில் தேனாகலாம்,
மணல் கூட சில நாளில் பொன்னாகலாம்,
ஆனாலும் அவையாவும் நீ யாகுமா,
அம்மா என்றைழைக்கின்ற சேயாகுமா!’ என்கிற தாலாட்டைக் கேளுங்கள்.
மனதை வருடும் இசை. குழைவான குரலுக்கிசைந்த வீணை, புல்லாங்குழல், இரண்டு தாள வாத்தியங்கள் மற்றும் கண்ணதாசனின் வரிகள் – இவ்வளவு தான் மொத்தமுமே! விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் ஏராளமான பாடல்கள் (‘ஆர்கெஸ்ட்ரேஷன்’ எனப்படும்) நிறைய வாத்தியங்களின் இசைக் கோர்வைக்குப் பெயர் போனவை.(இங்கே புதிய பறவை படத்திலிருந்து ’எங்கே நிம்மதி’ நினைவுக்கு வருகிறது) அவர்களிடமிருந்து இத்தகைய அமைதியான பாடல்கள் பல வந்திருக்கின்றன என்பதுதான் அவர்களைச் சிறந்த இசையமைப்பாளர்களாக்குகிறது. இந்தக் காவியத்துக்கு கவியரசின் வரிகள் ஒரு மகுடம்.
நான் கூறிய சூழ்நிலையில் இந்தப் பாடலைக் கேட்டு ரசியுங்கள் – இசையின் தாக்கம் என்னவென்பது உங்களுக்கு மேலும் புரியும்! மீண்டும் அடுத்த பாடலைப் பார்க்கும் முன், இந்தப் பாடலைக் கேளுங்கள்:
29 MAZHAI KOODA INH100310630 by Krishnamurthy80
Monday, May 9, 2011
அல்லூரும் அமைந்த வாழ்க்கையும்!
’அமையுமா அல்லூர் வாழ்க்கை?’ என்று நான் ஆதங்கப் பட்டு எழுதி எட்டு மாசமாயிற்று! அதற்கு முந்தைய 50 வருடங்களுக்கும் மேலான என் வாழ்க்கை நகரங்களிலேயே கழிந்துவிட்டது. இங்கே குடியேறிய இந்த எட்டு மாதங்களில் தான் நமது கலாசாரம், சம்பிரதாயங்கள் பற்றி எனக்கு எவ்வளவு மேலோட்டமாகத் தெரிந்திருந்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். இங்கே சுற்று வட்டத்தில் குடியிருக்கும் சகல ஜாதியினரும் காலங்காலமாக எவ்வளவு ஒற்றுமையாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதைக் காணும்போது இத்தகைய வாழ்க்கை முறையினை அமைத்துத் தந்த நமது முன்னோர்கள் எவ்வளவு தீர்க்கதரிசிகள் என்பதையும் புரிந்து கொண்டேன். இப்போது நானும் மெல்ல மெல்ல இந்த ஜோதியிலே மகிழ்ச்சியோடு கலந்து விட்டேன்!
அல்லூருக்குக் குடிபெயர்ந்த முதலே அன்போடு அரவணைத்து, கிராமத்தில் மற்றவர்களுக்கு என்னை அறிமுகம் செய்வித்தவர் எதிர் வீட்டு திரு.பிச்சை மாமா (இவருக்கு வயது 86. இப்போதும் கண்ணாடியில்லாமல் பேப்பர் படிக்கிறார்!). அல்லூரிலே பிறந்து, திருச்சியில் படித்து, அல்லூரிலேயே ரயில்வேயில் வேலை செய்து ரிடையர் ஆனவர். கோவில்களில் நடக்கும் திருவிழாக்கள் பற்றி இன்றும் இவர்தான் எனக்கு ‘கைட்’. மாமியும் எழுபதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். சற்றுக் கூன் போட்டிருக்கும் இவரும் மாமாவும் எவ்வளவு காதலோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை (எதிர் வீட்டிலிருப்பதால்) நான் பார்த்து வியந்து கொண்டிருக்கிறேன்.
தினமும் (ஞாயிற்றுக்கிழமை தவிர) இரவு 10 மணிக்கு, தெருவில் ஒரு மாமாவும் அவர் மனைவியும் சற்று உரக்கப் பேசிக்கொண்டு செல்வதைப் பார்த்திருந்தேன். அந்த மாமாவின் ஒரு கால் சற்று ஊனம். திருச்சியில் ஒரு ஹோட்டலில் வேலை செய்யும் போது விபத்தில் ஊனமாகி இருக்கிறது. இருப்பினும் கடை முதலாளியின் நல்ல மனத்தால் அங்கேயே தொடர்ந்து வேலை செய்து வருகிறார். அல்லூரில் குடியிருப்பதால் பஸ்ஸில் தினமும் திருச்சி போய்வருகிறார் என்பதையெல்லாம் அறிந்து கொண்டிருந்தேன்.
ஒரு இரவு அந்த மாமா வந்த அதே பஸ்ஸில் நானும் வர நேர்ந்தது. நாங்கள் இருவரும் பஸ்ஸிலிருந்து இறங்கியதும் அவர் மனைவி பஸ் நிறுத்தத்தில் சற்று தூரத்தில் அமர்ந்திருந்தவர், இவரைப்பார்த்ததும் ஓடி வந்து அவர் கையிலிருந்த பையை வாங்கிக் கொண்டு, மாமாவின் கையைத் தன் தோளில் போட்டு உடன் நடந்து வந்ததைப் பார்த்தபோதுதான் காதலின் இன்னொரு பரிமாணமும் எனக்குப் புலப்பட்டது. இதைப்போல இன்னமும் எத்தனையோ மனிதர்கள்.....
ஊரை நான்கு தெய்வங்கள் காவல் காத்து வருகிறார்கள். காவிரிக் கரையை ஒட்டிப் பிடாரியும், இளங்குடிச்சி ஆச்சியும், அக்ரஹாரத்தைப் பார்த்துக்கொண்டு ஸ்ரீனிவாசப் பெருமாளும், இவர்களுக்கெல்லாம் ஏறத்தாழ நடு சென்டரில் (ஐயாரப்பன் என்ற பெயரோடு) சிவனும் கோயில் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பிடாரி வருடத்தில் ஒரு பூச்சொரிதலோடும், பெருமாள் அவ்வப்போது பால் அல்லது புஷ்ப அபிஷேகம் செய்வித்துக் கொண்டும் அருள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். சிவனோ, பிரதோஷம் போன்ற நாட்களில் (நான்கு கோவில்களில் சற்றே பெரிய) தனது கோவிலின் உள்ளேயே வலம் வந்து கொண்டிருக்கிறார். இளங்குடிச்சி ஆச்சி மட்டும் ஊரில் வரி வசூலித்துக் கொண்டு, வருடத்தில் ஒரு வாரத்திற்கு இரவிலும் பகலிலுமாக ஊரெல்லாம் எழுந்தருளிக்கொண்டிருக்கிறாள். இந்த சமயத்தில் ஊரின் எல்லா வீதிகளிலும் உலவி, கணிசமாக ஆடு, கோழிகளையும் பலி வாங்கிக் கொள்கிறாள். கடைசி நாள் இரவில் ‘வையாலி’ என்ற பெயரில் குதிரை வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் அம்மனைச் சுமந்துகொண்டு, கோவில் முன் சாலையில் தாறுமாறாக ஓடி, மேலே கீழே ஏற்றி இறக்கி.... பார்க்கவே பயமாக இருக்கிறது! வாணவேடிக்கையும் உண்டு.

இளங்குடிச்சி ஆச்சியின் தேர்
இதைத்தவிர அக்ரஹாரத்தின் மத்தியில் ஒரு வீடு பஜனை மடமாகச் செயல் படுகிறது. அதில் தினசரி பஜனையும் நடக்கிறது. ராமநவமி போன்ற பண்டிகைகளின் போது, இரண்டு, மூன்று நாட்களுக்கு ‘ராதா கல்யாணம், சீதா கல்யாணம்’ என்று பிரசித்தமான பாகவதர்களைக் கொண்டு உபன்யாசங்களும் ஏற்பாடு செய்யப் படுகிறது. இந்த சமயங்களில் ஊரில் இருப்பவர்களுக்கு எல்லாம் மூன்று வேளை (கல்யாண) சாப்பாடும் உண்டு. (சாப்பாட்டிற்கு வரமுடியாத வயதானவர்கள் வீட்டிற்கே பார்சல் போய்விடுகிறது!)

அம்மனை வரவேற்கத் தயாராக அக்ரஹாரம்
விழாக்களை, உள்ளூர் வாசிகள் தவிர சென்னை, பெங்களூருவிலிருக்கும் அல்லூரைச் சேர்ந்தவர்களும் முன்னின்று நடத்துகிறார்கள். பஜனை மடத்தின் முன் தெருவை அடைத்துப் பந்தல் போட்டு விமரிசையாக நடக்கும். தங்கள் வீட்டில் நடக்கும் ஒரு திருமணத்தைப் போலவே அக்கறையோடு வீட்டுக்கு வீடு அழைத்துக் கொண்டாடுகிறார்கள். அப்போதும், மற்ற கோவில் முக்கிய திருநாட்களிலும் வெளியூரில் வசித்துவரும் அல்லூர்க்காரர்கள் எல்லாரையும் இங்கே பார்க்கலாம்.
வீட்டு விசேஷங்களில் கூட ஊர் முழுவதும் அக்கரையோடு கலந்து கொள்கிறது. இன்று கூட இங்கே ஒரு பூணூல் கல்யாணம். காலையிலேயே ஒருவர் வந்து காலைச் சிற்றுண்டிக்கும், மதியம் சாப்பாட்டுக்கும் அழைத்துவிட்டுப் போனார். மீண்டும் இருமுறை சாப்பாடு தயார் என்றும் அறிவித்துப் போனார்கள். மாலையில் புதிதாகப் பூணூல் போட்டுக் கொண்ட இரண்டு பையன்களையும் யானை மேல் ஏற்றி, மேளம், பாண்டு வாத்தியங்களுடன் தெருவில் ஊர்வலம் வந்தார்கள். ஒவ்வொரு வீட்டிலும் ஆரத்தி கரைத்து ஊற்றி, பதில் மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்கள்….
-000-
அல்லூரில் தினசரி வாழ்க்கை எப்படி இருக்கிறது, பார்க்கலாமா?
காலை 5.30க்கு எழுந்து வாசல் பக்கம் போனால், பெரும்பாலான வீடுகளின் முன்னர் கழுவி விடப்பட்டு, கோலமும் போட்டிருக்கும். (இதை, ‘முறை வாசல்’ என அழைக்கிறார்கள்). அனேகமாக எல்லாருமே அந்த நேரம் துயில் எழுந்து விடுகிறார்கள். நானும் எழுந்து, கணினிமுன் உட்கார்ந்து 8 மணிக்குத் தான் குளிக்கச் செல்வேன். (வேறொன்றுமில்லை, இளங்காலை 2 மணி முதல் 8 மணி வரை வலை உபயோகம் இலவசம், அதுதான்!) அனேகமாக ஆண் பெண் எல்லாருக்குமே காவிரிக்குளியல் தான். பகலில் 10 மணிக்குத் தெருவில் சென்றால் பெரும்பாலான இல்லங்கள் பூட்டியிருக்கும். வேலைக்கோ அல்லது எதற்காகவோ ‘டவுனு’க்குச் சென்றிருப்பார்கள். ஊரே அப்படி ஒரு அமைதியாக இருக்கும்.
இது, மாலை வரை நீடிக்கும். மாலையில், தெருவிலுள்ள வேத பாடசாலை (இரண்டு உண்டு) யைச் சேர்ந்த பையன்களும் மற்றவர்களும் சேர்ந்து தெருவில் வாலிபால் அல்லது கிரிக்கட் ஆடுவதுண்டு. இதை என்னைப் போன்ற ‘பெரிசு’கள் வாசலில் திண்ணையில் அல்லது (ஈஸி) சேரில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்போம். (இப்போது கோடையில், இவர்கள் காவிரிக்குச் சென்று விடுகிறார்கள். விளையாட்டு முடிந்ததும் அப்படியே குளித்துவிட்டு மாலை ஜபங்களையும் முடித்துக் கொண்டு வந்து விடுகிறார்கள்). வாசலில் அமர்ந்தாலும் சரி, அல்லது, வீட்டின் கொல்லை வரை கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு இருந்தாலும் சரி, காற்று கொட்டுகிறது. வெளியே தகிக்கும் வெப்பம் அவ்வளவாகத் தெரிவதில்லை. நானும் மாலையில் சிவன் கோவில் சென்று வருகிறேன்.
இடைப்பட்ட நேரங்களில், படிக்கவும் இசை கேட்கவும், டிவி பார்க்கவும், அல்லது தூங்கவும் செய்யலாம். இல்லையென்றால் நாமும் ‘டவுனு’க்குப் போய் வரலாம்.
இந்த அமைதியான, நகரங்களின் பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை, (பாரதி சொன்னது போல)
“என்னைப் புதிய உயிராக்கி,
எனக்கேதும் கவலையறச் செய்து – மதி
தன்னை மிகத் தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்து” கொண்டிருக்கிறது.
இங்கே இன்னமும் எவ்வளவோ உண்டு. அவற்றை வேறொரு சமயம் பார்ப்போமா?
-0000-
அல்லூருக்குக் குடிபெயர்ந்த முதலே அன்போடு அரவணைத்து, கிராமத்தில் மற்றவர்களுக்கு என்னை அறிமுகம் செய்வித்தவர் எதிர் வீட்டு திரு.பிச்சை மாமா (இவருக்கு வயது 86. இப்போதும் கண்ணாடியில்லாமல் பேப்பர் படிக்கிறார்!). அல்லூரிலே பிறந்து, திருச்சியில் படித்து, அல்லூரிலேயே ரயில்வேயில் வேலை செய்து ரிடையர் ஆனவர். கோவில்களில் நடக்கும் திருவிழாக்கள் பற்றி இன்றும் இவர்தான் எனக்கு ‘கைட்’. மாமியும் எழுபதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். சற்றுக் கூன் போட்டிருக்கும் இவரும் மாமாவும் எவ்வளவு காதலோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை (எதிர் வீட்டிலிருப்பதால்) நான் பார்த்து வியந்து கொண்டிருக்கிறேன்.
தினமும் (ஞாயிற்றுக்கிழமை தவிர) இரவு 10 மணிக்கு, தெருவில் ஒரு மாமாவும் அவர் மனைவியும் சற்று உரக்கப் பேசிக்கொண்டு செல்வதைப் பார்த்திருந்தேன். அந்த மாமாவின் ஒரு கால் சற்று ஊனம். திருச்சியில் ஒரு ஹோட்டலில் வேலை செய்யும் போது விபத்தில் ஊனமாகி இருக்கிறது. இருப்பினும் கடை முதலாளியின் நல்ல மனத்தால் அங்கேயே தொடர்ந்து வேலை செய்து வருகிறார். அல்லூரில் குடியிருப்பதால் பஸ்ஸில் தினமும் திருச்சி போய்வருகிறார் என்பதையெல்லாம் அறிந்து கொண்டிருந்தேன்.
ஒரு இரவு அந்த மாமா வந்த அதே பஸ்ஸில் நானும் வர நேர்ந்தது. நாங்கள் இருவரும் பஸ்ஸிலிருந்து இறங்கியதும் அவர் மனைவி பஸ் நிறுத்தத்தில் சற்று தூரத்தில் அமர்ந்திருந்தவர், இவரைப்பார்த்ததும் ஓடி வந்து அவர் கையிலிருந்த பையை வாங்கிக் கொண்டு, மாமாவின் கையைத் தன் தோளில் போட்டு உடன் நடந்து வந்ததைப் பார்த்தபோதுதான் காதலின் இன்னொரு பரிமாணமும் எனக்குப் புலப்பட்டது. இதைப்போல இன்னமும் எத்தனையோ மனிதர்கள்.....
ஊரை நான்கு தெய்வங்கள் காவல் காத்து வருகிறார்கள். காவிரிக் கரையை ஒட்டிப் பிடாரியும், இளங்குடிச்சி ஆச்சியும், அக்ரஹாரத்தைப் பார்த்துக்கொண்டு ஸ்ரீனிவாசப் பெருமாளும், இவர்களுக்கெல்லாம் ஏறத்தாழ நடு சென்டரில் (ஐயாரப்பன் என்ற பெயரோடு) சிவனும் கோயில் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பிடாரி வருடத்தில் ஒரு பூச்சொரிதலோடும், பெருமாள் அவ்வப்போது பால் அல்லது புஷ்ப அபிஷேகம் செய்வித்துக் கொண்டும் அருள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். சிவனோ, பிரதோஷம் போன்ற நாட்களில் (நான்கு கோவில்களில் சற்றே பெரிய) தனது கோவிலின் உள்ளேயே வலம் வந்து கொண்டிருக்கிறார். இளங்குடிச்சி ஆச்சி மட்டும் ஊரில் வரி வசூலித்துக் கொண்டு, வருடத்தில் ஒரு வாரத்திற்கு இரவிலும் பகலிலுமாக ஊரெல்லாம் எழுந்தருளிக்கொண்டிருக்கிறாள். இந்த சமயத்தில் ஊரின் எல்லா வீதிகளிலும் உலவி, கணிசமாக ஆடு, கோழிகளையும் பலி வாங்கிக் கொள்கிறாள். கடைசி நாள் இரவில் ‘வையாலி’ என்ற பெயரில் குதிரை வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் அம்மனைச் சுமந்துகொண்டு, கோவில் முன் சாலையில் தாறுமாறாக ஓடி, மேலே கீழே ஏற்றி இறக்கி.... பார்க்கவே பயமாக இருக்கிறது! வாணவேடிக்கையும் உண்டு.
இளங்குடிச்சி ஆச்சியின் தேர்
இதைத்தவிர அக்ரஹாரத்தின் மத்தியில் ஒரு வீடு பஜனை மடமாகச் செயல் படுகிறது. அதில் தினசரி பஜனையும் நடக்கிறது. ராமநவமி போன்ற பண்டிகைகளின் போது, இரண்டு, மூன்று நாட்களுக்கு ‘ராதா கல்யாணம், சீதா கல்யாணம்’ என்று பிரசித்தமான பாகவதர்களைக் கொண்டு உபன்யாசங்களும் ஏற்பாடு செய்யப் படுகிறது. இந்த சமயங்களில் ஊரில் இருப்பவர்களுக்கு எல்லாம் மூன்று வேளை (கல்யாண) சாப்பாடும் உண்டு. (சாப்பாட்டிற்கு வரமுடியாத வயதானவர்கள் வீட்டிற்கே பார்சல் போய்விடுகிறது!)
அம்மனை வரவேற்கத் தயாராக அக்ரஹாரம்
விழாக்களை, உள்ளூர் வாசிகள் தவிர சென்னை, பெங்களூருவிலிருக்கும் அல்லூரைச் சேர்ந்தவர்களும் முன்னின்று நடத்துகிறார்கள். பஜனை மடத்தின் முன் தெருவை அடைத்துப் பந்தல் போட்டு விமரிசையாக நடக்கும். தங்கள் வீட்டில் நடக்கும் ஒரு திருமணத்தைப் போலவே அக்கறையோடு வீட்டுக்கு வீடு அழைத்துக் கொண்டாடுகிறார்கள். அப்போதும், மற்ற கோவில் முக்கிய திருநாட்களிலும் வெளியூரில் வசித்துவரும் அல்லூர்க்காரர்கள் எல்லாரையும் இங்கே பார்க்கலாம்.
வீட்டு விசேஷங்களில் கூட ஊர் முழுவதும் அக்கரையோடு கலந்து கொள்கிறது. இன்று கூட இங்கே ஒரு பூணூல் கல்யாணம். காலையிலேயே ஒருவர் வந்து காலைச் சிற்றுண்டிக்கும், மதியம் சாப்பாட்டுக்கும் அழைத்துவிட்டுப் போனார். மீண்டும் இருமுறை சாப்பாடு தயார் என்றும் அறிவித்துப் போனார்கள். மாலையில் புதிதாகப் பூணூல் போட்டுக் கொண்ட இரண்டு பையன்களையும் யானை மேல் ஏற்றி, மேளம், பாண்டு வாத்தியங்களுடன் தெருவில் ஊர்வலம் வந்தார்கள். ஒவ்வொரு வீட்டிலும் ஆரத்தி கரைத்து ஊற்றி, பதில் மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்கள்….
-000-
அல்லூரில் தினசரி வாழ்க்கை எப்படி இருக்கிறது, பார்க்கலாமா?
காலை 5.30க்கு எழுந்து வாசல் பக்கம் போனால், பெரும்பாலான வீடுகளின் முன்னர் கழுவி விடப்பட்டு, கோலமும் போட்டிருக்கும். (இதை, ‘முறை வாசல்’ என அழைக்கிறார்கள்). அனேகமாக எல்லாருமே அந்த நேரம் துயில் எழுந்து விடுகிறார்கள். நானும் எழுந்து, கணினிமுன் உட்கார்ந்து 8 மணிக்குத் தான் குளிக்கச் செல்வேன். (வேறொன்றுமில்லை, இளங்காலை 2 மணி முதல் 8 மணி வரை வலை உபயோகம் இலவசம், அதுதான்!) அனேகமாக ஆண் பெண் எல்லாருக்குமே காவிரிக்குளியல் தான். பகலில் 10 மணிக்குத் தெருவில் சென்றால் பெரும்பாலான இல்லங்கள் பூட்டியிருக்கும். வேலைக்கோ அல்லது எதற்காகவோ ‘டவுனு’க்குச் சென்றிருப்பார்கள். ஊரே அப்படி ஒரு அமைதியாக இருக்கும்.
இது, மாலை வரை நீடிக்கும். மாலையில், தெருவிலுள்ள வேத பாடசாலை (இரண்டு உண்டு) யைச் சேர்ந்த பையன்களும் மற்றவர்களும் சேர்ந்து தெருவில் வாலிபால் அல்லது கிரிக்கட் ஆடுவதுண்டு. இதை என்னைப் போன்ற ‘பெரிசு’கள் வாசலில் திண்ணையில் அல்லது (ஈஸி) சேரில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்போம். (இப்போது கோடையில், இவர்கள் காவிரிக்குச் சென்று விடுகிறார்கள். விளையாட்டு முடிந்ததும் அப்படியே குளித்துவிட்டு மாலை ஜபங்களையும் முடித்துக் கொண்டு வந்து விடுகிறார்கள்). வாசலில் அமர்ந்தாலும் சரி, அல்லது, வீட்டின் கொல்லை வரை கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு இருந்தாலும் சரி, காற்று கொட்டுகிறது. வெளியே தகிக்கும் வெப்பம் அவ்வளவாகத் தெரிவதில்லை. நானும் மாலையில் சிவன் கோவில் சென்று வருகிறேன்.
இடைப்பட்ட நேரங்களில், படிக்கவும் இசை கேட்கவும், டிவி பார்க்கவும், அல்லது தூங்கவும் செய்யலாம். இல்லையென்றால் நாமும் ‘டவுனு’க்குப் போய் வரலாம்.
இந்த அமைதியான, நகரங்களின் பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை, (பாரதி சொன்னது போல)
“என்னைப் புதிய உயிராக்கி,
எனக்கேதும் கவலையறச் செய்து – மதி
தன்னை மிகத் தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்து” கொண்டிருக்கிறது.
இங்கே இன்னமும் எவ்வளவோ உண்டு. அவற்றை வேறொரு சமயம் பார்ப்போமா?
-0000-
Friday, April 29, 2011
குறுக்கு வழி!
நம்ம சொலவடை (குமுதம் பாணியில்: சா.ஆ.ச.ஆ) மீண்டும் நினைவுக்கு வந்தது. சென்றமாத என்னுடைய தொலைபேசி பில் ரூ.1200/-. ரிடையரான நமக்குக் கட்டுப்படி ஆகவில்லை. ‘வேண்டியும் இருக்கு, வேதனையும் பண்றது’ என்று எதைப்பற்றியோ சொல்வார்களே, அதுபோல தொலைபேசி இல்லாமலும் முடியாது. வலைத்தொடர்பு அவசியமில்லையா? எனவே, ஆராய்ச்சி செய்து (!) ஒரு குறுக்கு வழியைக் கண்டுபிடிச்சுட்டோம்ல! ராத்திரி (இளங்காலை?) 2 மணிமுதல் 8 மணி வரை வலையில் இலவசத் தேடல் உண்டு என்றறிந்து, விடிகாலையில் எழுந்த மாதிரியும் ஆச்சு, வலையில் மேய்ந்ததாகவும் ஆச்சு என்று, தினமும் காலை 5.30க்கே எழுந்து மேய்ச்சலை ஜோராக நடத்திக்கொண்டிருக்கிறேன்! போனஸாக, அமெரிக்காவிலிருக்கும் என் மருமகளும் என்னுடன் தினமும் சாட்டிக்கொண்டிருக்கிறாள்!
Thursday, April 28, 2011
காலம் ஒரு நாள் மாறும்.....
சமீபத்தில் வாலி அவர்கள் எழுதியிருந்த ஒரு விஷயம் கண்ணில் பட்டது. திரு.டி.எம்.எஸ் அவருடைய வீட்டிற்கு வந்திருந்த போது வாலியின் அன்னை, தன் விருப்பப் பாடலான ‘ஏன் பிறந்தாய் மகனே’ என்ற பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்தாராம். என்னுடைய டாப் 3 டி.எம்.எஸ் பாடல்களில் முதலாவது இடத்தைப் பிடித்திருக்கும் பாடலது. அதன் இசையிலும் பாடியதிலும் ஒரு உண்மையான உணர்ச்சி கொப்பளித்திருக்கும். பல ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் உண்மையான காரணம் தெரிந்தது. தன் சொந்த மகனைக் காலனுக்குப் பறி கொடுத்த வேதனையில் டி.எம்.எஸ் இருந்த போதில், சோகத்தை மறக்கடிக்க வேண்டி, எம்.எஸ். விசுவநாதன் அவரை இழுத்துக் கொண்டு போய்ப் பாட வைத்த பாடலாம் அது! சொந்த வாழ்க்கையின் சோகங்கள் எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறது, பாருங்கள். எதனாலோ, பாடகி சித்ராவின் சமீபத்திய இழப்பு என்னை அப்படித்தான் உணர வைத்தது. ஆதரவளிக்க நாம் வேண்டும் ஆண்டவனே அந்த சோகத்துக்குக் காரணமானால் யாரால், எப்படித் தன் ஒரே மகளை இழந்து நிற்கும் அந்தத் தாய்க்கு ஆறுதல் சொல்லமுடியும்?
‘காலம் ஒரு நாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும்’ என்று நம்புவோம்.
‘காலம் ஒரு நாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும்’ என்று நம்புவோம்.
Subscribe to:
Posts (Atom)