Showing posts with label name and you. Show all posts
Showing posts with label name and you. Show all posts

Monday, March 23, 2009

அழைத்தால் நீ வருவாயோ?

'ஆயிரம் நாமம் தன்னில் எதைச் சொல்லி அழைத்தால் நீ வருவாயோ' என்கிற ஒரு பாடல் மதுரை சோமு அவர்களால் மிகவும் பிரபலமானது. யோசித்துப் பார்க்கையில், நாம் எல்லோருக்குமே (ஆயிரம் நாமம் இல்லாவிட்டாலும்)குறைந்த பட்சம் சில டஜன் பெயர்களாவது இருப்பது உறுதி. பிறந்தவுடன் குட்டிப்பாப்பா என்று ஆரம்பிக்கிற பேர், எப்படியெல்லாமோ போகும்!
இன்றைய தினம் புதிதாக (அதாவது, நமது நாட்டுக்கு) வந்திருக்கும் வழக்கப்படி, பிறப்பது ஆணாக இருந்தால் இன்ன பெயர், அல்லது, பெண்ணாக இருந்தால் இன்ன பெயர் என்று முன்பே பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டு, பிறப்புச் சான்றிதழில் பெயருடனேயே குழந்தைகள் 'பிறக்கிறார்கள்'. நாங்களெல்லாம் அந்தக் காலம்! நான்காவது பாரம் (ஒன்பதாம் கிளாஸ்) வரை எந்தப் பெயரில் இருந்தாலும், அப்போது கூப்பிட்டுக் கேட்பார்கள், உன்னுடைய பெயரும், பிறந்த நாளும் சரியாக இருக்கிறதா, அல்லது மாற்ற வேண்டுமா என்று. ஏனென்றால், ஒருமுறை எஸ்.எஸ்.எல்.சி. புத்தகத்தில் பதிவாகிவிட்டால், மாற்றுவது என்பது சிரமமான காரியம் என்பதால்.
ஆகட்டும், சான்றிதழில் உள்ள பெயர் ஒன்றாகவும், கூப்பிடுவது (அனேகமாக) வேறொன்றாகவும் தான் இருக்கும். இது தவிர, பட்டப்பெயர்கள், காரணப் பெயர்கள், என்று எத்தனையோ!
பெரியவர்களாகி (கேர்ள் அல்லது பாய்) நண்பர்கள் தங்களுக்குள் வைத்துக்கொள்ளும் பெயர்களே வேறு! பன்னிக்குட்டி, நாய் என்று எத்தனையோ, இப்படிப் போய்க்கொண்டே இருக்கலாம்- ஆனால் இப்போது என் நண்பன், 'ஏய், அறிவு கெட்ட முண்டம், எவ்வளவு நேரமாக கூப்பிடுவது' என்று அன்போடு அழைப்பதால், மீண்டும் சந்திப்போம்!