Wednesday, August 12, 2009

மீனாவும் சங்கத்தமிழும்!

எனக்கு, ரவிகுமார் என்றொரு நண்பர். அவர் மணந்திருப்பது என் தமக்கையின் மகள் மீனாவை. மீனாவுக்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே ஒரு பழக்கம். நாள் தோறும் இரவு படுக்கைக்குச் செல்லுமுன்னர், ஓளவையாரின் ‘பாலும் தெளி தேனும்’ என்ற பாடலைச் சொல்லிவிட்டுத் தூங்கச் செல்வாள்.பாடல் தெரியுமல்லவா உங்களுக்கு? முடிவில் ‘சங்கத்தமிழ் மூன்றும் தா’ என்று முடியுமல்லவா? அவர்கள் திருமணமாகிக் கொஞ்ச நாள் இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரவி, ஒரு நாள் கேட்டார், ‘ஆமாம் மீனா, நானும் தினமும் பார்க்கிறேன், இந்தப் பாடலைச் சொல்லிக்கொண்டிருக்கிறாயே, திடீரென்று ஒரு நாள் அந்த விநாயகனே நேரில் வந்து ‘இந்தாம்மா, நீ கேட்ட சங்கத்தமிழ்’ என்று மூன்று தமிழையும் கொடுத்துச் சென்றால், அதை வைத்துக் கொண்டு என்ன செய்வாய்?’ என்று! மீனா இன்னமும் முழித்துக்கொண்டிருக்கிறாள்!

1 comment:

  1. ஏதோ,காசு, பணம், நகை என்று ஏதாவது கேட்டு அது கிடைத்தால் மகிழ்ச்சியடையலாம்.சங்கத்தமிழ் மூன்றையும் வைத்துக்கொண்டு என்னய்யா செய்வது?அதுதான் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்!

    ReplyDelete