Thursday, September 17, 2009

மனசாட்சியும் பணசாட்சியும்!

பணம் பண்ண, மனசாட்சி இருக்ககூடாது என்பதைப் புரிந்து கொள்ள இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைத்தது எனக்கு. பணமிருந்தால் எல்லாமே கிடைக்கும் - அதாவது அன்பைத்தவிர - என்ற நம்பிக்கையையும் தகர்த்தது அந்த உண்மை.

நன்றாக ஒடியாடிக்கொண்டிருந்த ஒரு பெண்மணிக்கு இப்போது தள்ளாமையினால் ஒரே இடத்தில் வசிக்க வேண்டிய அவசியம் வந்துவிட்டது. மகனும் மருமகளும் வேலைக்குச் செல்கிறார்கள்.வீடு திரும்ப இருவருக்கும் இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிடும். இதற்காக, இவரைப் பகல் வேளையில் பார்த்துக் கொள்ள, சென்னையில் இருக்கும் ஏராளமான முகவர்களில் ஒருவர் மூலம் வீட்டில் இருந்து கவனித்துக் கொள்ள ஒரு பெண்மணியை அமர்த்தியாயிற்று. இதற்கு ஒரு கணிசமான தொகை செலவாகுமென்பதை அறிவீர்களல்லவா?

சென்னையில் இப்போது பணம் பண்ண இன்னொரு சிறந்த வழியாம் இந்த மாதிரி ஏஜன்ஸி நடத்துவது! இதில், உங்களிடமிருந்தும் கமிஷன் வாங்குவார்கள், அவர்கள் அனுப்பி வைக்கும் அந்த நபரிடமும் கமிஷன் வாங்குகிறார்கள். இதற்கான தொகை கொஞ்சமல்ல - இரண்டு பக்கத்திலும் ஓரோர் மாத சம்பளம்! இத்தோடு போவதில்லை இந்த சமாசாரம். சரியாக இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கழிந்ததும் ஏதேனும் ஒரு காரணம் சொல்லி, நம் வீட்டில் வேலை செய்பவர் கழண்டு கொள்வார் - நீங்கள் மீண்டும் அதே அல்லது வேறே ஏஜண்டிடம் மாட்டிக்கொண்டு மீண்டும் கப்பம் கட்ட ஆரம்பிக்கவேண்டியது தான். இந்த விவகாரம் ஒரு திட்டத்தோடுதான் நடக்கிறது என்பதை இரண்டு மூன்று இடத்தில் என்னால் கவனித்து அனுமானிக்க முடிந்தது. இது ஆயாவேலைக்கு மட்டுமல்ல, எல்லாவிதமான வீட்டு வேலைக்கு ஏற்பாடு செய்யும் ஏஜன்ஸிகளிலும் நடக்கிறதாம்! மனசாட்சியாவது, மண்ணாங்கட்டியாவது, போங்க ஸார்!

1 comment:

  1. /// மனசாட்சியாவது, மண்ணாங்கட்டியாவது, போங்க ஸார்! ///

    என்று மாறும் இந்த அவல நிலை!!

    pls remove word verification.

    ReplyDelete