Wednesday, February 23, 2011

சொலவடை!

ஊர்ப்பக்கம் ஒரு சொலவடை வழக்கத்தில் இருக்கிறது. “சாமிக்கும் ஆச்சு, சட்னிக்கும் ஆச்சு” என்று. அதாவது தேங்காய் உடைத்தால் இரண்டுக்கும் பயன் படணுமாம்!

ஒன்றுமில்லை. 24ந் தேதி பிறந்த நாளுக்கு, 23ந் தேதி பத்திரிக்கைகளில் அறிக்கை விட்டிருக்கிறார், தமிழ்நாட்டை ‘குடும்பத்தின்’ பிடியிலிருந்து காப்பாற்றி, ‘தோழியின்’ கையில் கொடுக்கப் பாடாய்ப் படும் அம்மணி! ஊரெல்லாம் கடந்த ஒரு மாதகாலமாக எங்குபார்த்தாலும் ‘அம்மா, தாயே, அன்னையே’ என்று பெரிய பெரிய ஃப்ளெக்ஸ் தட்டிகளில் சிரித்துக் கொண்டிருக்கும் அந்த அம்மா, முன்னரே அறிக்கை விட்டிருந்தால் எவ்வளவு பணம் விரயமாவது தடுக்கப் பட்டிருக்கும்?

இன்னும் சிலர், மற்றொரு அன்னையின் சாவுக்குத் தொலைபேசியில் துக்கத்தை ஒலிபரப்புச் செய்து ஆதாயம் தேடுகிறார்கள்! இதையெல்லாம் பார்க்கும் போதுதான் மேற்கூறிய சொலவடை நினைவுக்கு வந்தது. கூடவே, தேர்தல் வரப்போவதும் நினைவுக்கு வந்தது!

No comments:

Post a Comment