Thursday, February 26, 2009

ஒரு நியாயமான கோபம்!

ஊமைக் கோபத்தைப் பற்றிச் சொன்னேன். நியாயமான கோபம் ஒன்று எனக்குண்டு. எவ்வளவோ இடத்தில் பார்த்துவிட்டேன்-வயதான, முடியாத, முதியவர்களை எனக்குத்தெரிந்த பலபேர் நன்றாகத்தான் வைத்துக் காப்பாற்றி வருகிறார்கள். ஆனாலும் இந்த 'பெரிசுகள்' வசதிகளை அனுபவித்துக்கொண்டு சும்மா இருப்பதில்லை. எதையாவது அல்லது யாரையாவது குறை சொல்லாவிட்டால் இவர்களுக்கு நிம்மதியாகவே இருக்காது. ஓரளவுக்குப் பொறுத்துப் பார்க்கும் 'சிறுசுகள்', "யார் எப்படிப் போனால் உனக்கென்ன, பேசாமல் இரேன்" என்று சொன்னவுடன் பார்க்கவேண்டும். அந்த (திட்டிய) சிறுசின் வாழ்க்கை வரலாறை முழுக்க முழுக்க (முணுமுணுப்பு மூலமாகவே) தெரிந்து கொண்டு விடலாம். இலவச இணைப்பாக திருமணங்களின் மூலம் குடும்பத்தில் ஒருவராகியிருக்கும் பெண்டிரின் பிரதாபங்களையும் அறிய வாய்ப்புண்டு!

No comments:

Post a Comment