Friday, February 19, 2010

அண்ணலின் சமாதியில் ஆவேசம்!

 
Posted by Picasa


இந்தப்படத்துக்குப் பின்னால் ஒரு சிறிய நிகழ்ச்சியும் பெரிய ஆதங்கமும் இருக்கிறது. கர்நாடக இசை பற்றிக் கொஞ்சம் பரிச்சயம் உள்ளவர்களுக்கு, இது ஸ்ரீ தியாகராஜருடைய சமாதி என்பதும் அவருடைய உருவச்சிலை என்பதும் நிச்சயம் தெரிந்திருக்கும். சமீபத்தில் அங்கே செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.முதல் முறையாகச் செல்வதனால் மிகுந்த ஆவலோடு, சற்று நேரம் அமைதியாக அமர்ந்து அஞ்சலி செலுத்தலாம் என்று அங்கு சென்றடைந்தேன். நான் போன சமயம் ஒரு குடும்பத்தினர் அமர்ந்திருக்க, பூஜை நடந்துகொண்டிருந்தது. அது முடிந்தவுடன், அங்கே இருந்த பூஜை செய்பவர்களில் ஒருவரிடம் புகைப்படம் எடுக்கலாமா என்று அனுமதி கேட்டேன். தாராளமாக என்று அவர் கூறியதும் இந்தப்படத்தை எடுத்தேன். உடனே அங்கிருந்த இன்னொரு (சற்று முதிய) அர்ச்சகர்,’படம் எடுத்தது தவறு, இனிமேல் எடுக்க வேண்டாம்’ என்றார். நானோ, அனுமதி கேட்டுத்தான் எடுத்தேன் என்று கூறியவுடன் வந்ததே பாருங்கள் வார்த்தைகள்! ‘யாரைக் கேட்டீர்கள்? இங்கே என்னைக் கேட்காமல் எதுவும் செய்யக்கூடாது’ என்று கத்த ஆரம்பித்தார். வருடாவருடம் தொலைக்காட்சியிலும் மற்ற அச்சு மீடியாக்களிலும் இதே படங்கள் வருவது எப்படி? என்று கேட்டதற்கு ‘அது வேறு’ என்று முடித்துக்கொண்டார். நானும் அங்கே சென்றதில் ஏற்கனவே இருந்த அமைதியையும் தொலைத்துவிட்டு உடனே வெளியேறினேன்.இப்படிச் செய்வது,’சாந்தம் இல்லையென்றால் செளக்கியம் இல்லை’ (சாந்தமுலேகா ஸெளக்யமு லேது) என்று பாடிய அந்த தியாகராஜருக்கே பொறுக்குமா என்பது தெரியவில்லை!

No comments:

Post a Comment