Tuesday, April 3, 2012

சோலைக்குள்ளே குயிலுக்குஞ்சு!











இன்று சீர்காழியும் சுசீலாவும் ஒரு அருமையான டூயட்டை நமக்காகப் பாடுகிறார்கள்.

’பானைபிடித்தவள் பாக்கியசாலி’ என்றொரு திரைப்படம். அதை, டி.எஸ்.துரைராஜ் என்ற காமெடி நடிகர் தயாரித்து, இயக்கி, நடித்திருந்தார். (சந்திரபாபுவின் ‘கோவா மாம்பழமே’ பாடல் நினைவிருக்கிறதா? அதில் அவருடன் நடித்துப் பாடலையும் கூடப் பாடுவார், இவர்.) என்.எஸ் கிருஷ்ணனின் சம காலக் கலைஞரானதினால் மிகுந்த திறமையிருந்தும் அதிகம் சோபிக்காமல் போனவர், டி.எஸ்.துரைராஜ்.

இந்தப் படத்தில் பாலாஜி, சாவித்திரி நடித்திருந்தனர். மாமேதையான எஸ்.வி.வெங்கடராமன் இசையமைத்திருந்தார். இதில் இடம் பெற்ற இன்னொரு அருமையான பாடல், ‘புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே’. அந்தக் காலத்தில், திருமண வீட்டு ஒலிபெருக்கிகளில் நிச்சயமாக இடம் பெற்ற பாடலிது. திருமணமாகவிருக்கும் தங்கைக்குப் புகுந்த வீட்டில் எப்படி வாழவேண்டுமென்று அண்ணன் அறிவுரைகள் சொல்வது போல் இருக்கும், இன்னமும் எங்கோ ஒலித்துக் கொண்டிருக்கிற பாடல்!

‘நவராத்திரி’ படம் பார்த்திருப்பீர்கள். அதில், சாவித்திரி வீட்டைவிட்டுப் போய்ப் பல சிவாஜிகளைச் சந்திப்பார். அந்தப் படம் வருவதற்குப் பல ஆண்டுகள் முன்னரே, ’பானை பிடித்தவள் பாக்கியசாலி’ படத்தில் அண்ணனைப் பிரிந்த பட்டிக்காட்டுப் பெண், வழி தெரியாமல், பலதரப் பட்ட மனிதர்களைச் சந்தித்துக் முடிவில் தனக்கு நிச்சயிக்கப் பட்டிருந்த காதலனுடன் சேருவார்!

பாடலைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை! அருமையான இசையமைப்பாளர், பாடகர்கள் எல்லாரும் சேர்ந்து படைத்த விருந்திது! கேட்டு ரசிக்கத் தயாரா? இதோ, பாடல்:

No comments:

Post a Comment