Saturday, March 31, 2012

நிலவோடு வான்முகில்...!

நண்பர்களே,

இன்று நமக்காக சீர்காழியுடன் பாடவந்திருப்பவர், ஒரு ஸ்பெஷல் பாடகி. இவர் குரலை நீங்கள் ஏற்கனவே முன்னொரு பதிவில் (டி.ஆர்.மகாலிங்கத்துடன் இவர் பாடியிருந்த ஒரு அற்புதமான பாடலில்) கேட்டிருக்கிறீர்கள். ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் இவர்கள் பாடியிருந்த ‘நானன்றி யார் வருவார்’ என்ற பாடலைக் குறிப்பிடுகிறேன். ஏ.பி.கோமளா, சீர்காழியுடன் இணைந்து பாடியிருக்கும் ’நிலவோடு வான்முகில்’ என்ற பாடலை உங்களுக்கு அளிக்கிறேன். இப்பாடல், எம்ஜிஆர் நடித்த ராஜராஜன் என்ற திரைப் படத்திற்காக, மாமா கே.வி.மஹாதேவன் இசையில் இடம் பெற்றது.

பாடலில், இணைப்பிசையில் ‘ஒரு மாதிரி’யான மேற்கத்திய இசையும், அதன் பின்னால் டபிள்பேஸ் (மிகப் பெரிய வயலின் - தாளம்/கார்ட்ஸ்ஸுக்காக தொம் தொம் என்ற ஒலியுடன்) ஒலிப்பதையும், மாமாவின் ட்ரேட் மார்க் தபலாவையும், அருமையான மெட்டையும், குளுமையான குரல்களையும் கவனியுங்கள். இதோ பாடல்:

No comments:

Post a Comment