Friday, March 30, 2012

சீர்காழி வாஆஆஆஆரம்!



நண்பர்களே,

இப்போதிலிருந்து ’சீர்காழி ‘வாஆஆரம்’ தொடங்க உத்தேசம். அவருடன் நமது பழைய பாடகிகள் இணைந்து பாடியிருக்கும் பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமா? இதென்ன கேள்வி, என்கிறீர்களா, எல்லாம் சும்மா ஒரு இதுக்குத்தான்!

இன்றைய கச்சேரியை ஆரம்பித்து வைக்க, ஜிக்கி அவர்களை அழைக்கிறேன். (வேறொன்றுமில்லை, இதற்கு முன்னால் இவரும் சீர்காழியும் அளித்த ‘அன்பே என் ஆரமுதே’ இன்னும் மனதை விட்டு அகல மறுக்கிறது!)

இந்தப் பாட்டும் ’கோமதியின் காதலன்’ படத்திலிருந்து, ஜி.ராமனாதன் இசையில் வருகிறது. இருவரின் கணீரென்ற துல்லியமான குரலில், வாத்தியங்களின் இசையை மீறிக்கொண்டு ஒலிக்கிற சோகப்பாடல்,இது. இருவரும் பாடும்போது, பின்னால் எலக்ட்ரிக் கிடாரின் இசை ஒலிப்பதைக் கவனியுங்கள்.

அடுத்து, சீர்காழியுடன் யார் பாடுகிறார்கள்? பார்க்கலாம். இப்போது, ‘மின்னுவதெல்லாம்’, சீர்காழி-ஜிக்கியுடன், இதோ:

2 comments:

  1. ஆஹா.... சீர்காழி வாரம்.... :) எங்களுக்கெல்லாம் இசை விருந்து தான்..... காத்திருக்கிறோம்....

    நான் கேட்ட பாடலும் உண்டா?

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி,திரு.வெங்கட் நாகராஜ்.நீங்கள் கேட்ட பாடலைத் தேடத்தொடங்கியதில் விளைந்ததுதான் இந்த சீர்காழி வாஆஆஆரம்! அந்தப் பாடல் இடம் பெற்ற படத்தின் பெயர் தெரிந்தால் பகிர்வுக்கு வழிபிறக்கும். தனிப்ப்பாடலாக இருந்தாலும் குறிப்பிடுங்கள். முயற்சிக்கிறேன்! ஒரு உத்திரவாதம்: வரப்போகும் பாடல்கள் எல்லாமே காலங்கடந்த ரத்தினங்கள்! மீண்டும் நன்றி!

    ReplyDelete