Saturday, April 7, 2012

இன்னொரு காலங்கடந்த பாடல்!

சென்றமுறை ஒரு மகிழ்ச்சியான பாடலை நமக்காகக் கொடுத்த சீர்காழியும் சுசீலாவும் உங்களைச் சோகத்திலும் ஆழ்த்தமுடியும் என்று நிரூபிக்கவிருக்கிறார்கள், இன்றைய பாடலில்!

எம்ஜிஆரின் கருப்பு-வெள்ளைப் படங்களில் ஒன்று, ’சபாஷ், மாப்ளே’. இதில் அவருடன், மாலினியும் எம்.ஆர்.ராதாவும் நடித்திருந்தனர். இதே காலகட்டத்தில் சிவாஜி, மாலினியுடன் ‘சபாஷ் மீனா’ எனும் காமெடிப் படத்திலும் நடித்திருந்தார்!(இதில் இடம் பெற்ற ’சித்திரம் பேசுதடி’ என்ற அருமையான பாடலை நீங்கள் மறக்க வாய்ப்பே இல்லை!)

’சபாஷ் மாப்ளே’யும் காமெடிப் படந்தான். இதில் பாடல்களை மருதகாசி எழுதியிருந்தார்.

இன்றைய பாடலைக் கேளுங்கள். துல்லியமான குரல்கள், துல்லியமான ஒலிப்பதிவு, அமைதியான இசை (ஹார்மோனியத்தையும் புல்லாங்குழலையும் இணைத்து ஒரு சின்ன பீஸ் உள்ளத்தை அள்ளுகிறது, கவனியுங்கள்!) பாட்டில் ஒரே சரணந்தான். அதில் தபலாவைத்தவிர வேறு துணையில்லை. அதிலும் சுசீலா பாடும் போது, ‘ஏக்கப் பெருமூச்சை’ என்ற இடத்திலிருந்து சுசீலாவின் குரல் கூடவே தபலா கொஞ்சுவதைக் கேட்டவுடனேயே, உங்களுக்கு இந்தப் படத்தின் இசையமைப்பாளர், நமது கே.வி.மகாதேவன் என்பது தெரிந்துவிடுமே!

’சபாஷ் மாப்ளே’ படத்தில் இதே பல்லவியில் ஒரு பாட்டைச் சீர்காழி, எம்.ஜி.ஆருக்காகத் தனியாகக் கதாநாயகியைப் பார்த்துப் பாடுவார். அந்தப் பாட்டில் முழு இசைக்குழுவும் பங்கு கொண்டிருக்கும். சரணங்களில் மெட்டே மாறியிருக்கும்.

இப்போது வாருங்கள், எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத, காலத்தைக் கடந்த இந்த சோகமான சுகத்தை அனுபவிக்க!


2 comments:

  1. அற்புதமான பாடல்
    கேட்டு ரசித்து மகிழ்ந்தேன்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, திரு.ரமணி!

    ReplyDelete