Friday, February 27, 2009

ரஹ்மான் ஜாக்கிரதை!

இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி! - பட்டுக்கோட்டை

இந்தியராகிய நம் கனவுகளைத் தன் உழைப்பின் மூலமாகத் தாயகம் கொண்டு சேர்த்திருக்கிறார் சகோதரர் ரஹ்மான். அவருக்கு வாழ்த்துக்கள் கூறவும், பூமாலை போடவும் கூட்டம் சேர்ந்தது, சேரப்போகிறது. என் எதிர்பார்ப்பில், இனிமேலும் அவர் அதே உழைப்போடுதான் பாடல்களைக் கொடுக்கப்போகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒருவேளை அவரின் வருங்காலப் பாடல்கள் மக்களுக்குப் பிடிக்காமல் போயிற்று என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்போது இதே மக்களும், பத்திரிகைகளும் என்னமாகக் கிழிப்பார்கள் என்பது நமக்குத் தெரியாதா என்ன! நம்முடைய இந்திய கிரிக்கெட் வீரர்கள் இவர்கள் கையில் படும் பாடு நாம் அறியாததா! எனவேதான் இந்த எச்சரிக்கை!

1 comment:

  1. ஹலோ,ஆரெஸ்கே!
    என் சொல்லுக்குச் செவிமடுத்துப் பதிவு தொடங்கியிருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி. வரவேற்கிறேன்.இணையத்தை இனிய தமிழால் நிரப்புவோம்.
    சின்னச் சின்ன ஆனால் சிறந்த, சிந்திக்க வைக்கும் இடுகைகள்.தொடரட்டும் உங்கள் பயணம்!

    ReplyDelete