Wednesday, April 1, 2009

அரசியல்வாதிகளும் அப்பாவித் தொண்டர்களும்!

நானும் ரொம்ப நாளாகப் பார்த்துக்கொண்டு வருகிறேன். ஒரு விஷயம் மட்டும் எனக்குப் பிடிபடவே மாட்டேன் என்கிறது! இதில், நமது தாய்த்திருநாட்டின் அரசியல்வாதிகள் எல்லாரும் ஒரே மாதிரியாகத்தான் மக்களை (அதாவது தம் தொண்டர்களை) ஏமாற்றிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் விஷயம் புரிந்தும்கூட அந்தத் தொண்டர்கள் மீண்டும், மீண்டும் ஏமாறுவது ஏன்? அதாவது, அரசியல்வாதி, பல்வேறு காரணங்களுக்காக போராட்டங்கள் நடத்தி சிறைக்குள் செல்கிறான்-சென்ற வேகத்திலேயே ஜாமீனில் வெளியேயும் வந்து விடுகிறான். ஆனால் இந்தத் தொண்டனோ, அரசியல்வாதி சிறைக்குச் செல்லும்போதெல்லாம் மறியல் நடத்தி, தடியடி, துப்பாக்கிச்சூடு முதலிய எல்லா கஷ்டங்களையும் பட்டுக்கொண்டு, அடுத்த அரசியல்வாதியின் போராட்டத்தில் கலந்துகொள்ளச் செல்கிறான்! ஒருவேளை, இதற்கும் நூறு ரூபாய், பிரியாணிப் பொட்டலம் எல்லாம் கிடைக்குமோ?!

No comments:

Post a Comment