Thursday, April 30, 2009

எல்லாப்புகழும் எனக்கே!

நமது இந்தியத் திருநாட்டில் தனியர்களாக நின்று வரலாறு படைத்தவர்கள் ஏராளம். அதே போல,ஒரு துறையில் இரட்டையர்களாக சாதித்தவர்களும் நிறைய உண்டு. கலைத்துறை, அதாவது திரைப்படங்களை எடுத்துக்கொண்டால், வடக்கே ஹன்ஸ்லால்-பகத்ராம், சங்கர்-ஜெய்கிஷன், லக்ஷ்மிகாந்த்-ப்யாரிலால் போன்ற பலர் கொடிகட்டிப் பறந்ததுண்டு. தமிழிலும் அப்படி ஜொலித்தவர்கள்தான் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.கடந்த 60 வருடங்களுக்கும் மேலாகவே தமிழ்த் திரை இசையின் தீவிர ரசிகன் என்கிற முறையில் எனக்கொரு வருத்தம் உண்டு. வடக்கில் இருந்தவர்களும் பிரிந்தார்கள் - நம்மவர்களும் பிரிந்தார்கள். இதில் வித்தியாசம் என்னவென்றால், அங்கிருந்தவர்கள் யாரும் (பிரிவுக்குப்பின்னர்) இருவரில் எல்லாப்பாட்டும் என்னால் மட்டுமே போடப்பட்டது என்று சொந்தம் கொண்டாடவில்லை. கடைசிவரை பட டைட்டில்களில் இருவர் பெயர்களும் போடப்பட்டன. ஆனால் இங்கோ, அந்தப் பெருந்தன்மை ஒருவருக்கில்லை! நான் போட்டேன், நானே போட்டேன் என்று சத்தியம் செய்யாத குறைதான்! இன்றும் எல்லா தொலைக்காட்சிகளிலும் அழுது, அரற்றிக் கொண்டு...கண்றாவி! வயலின் வித்தகரான மற்றவர் எல்லாப்பாட்டையும் இருவரும்தான் போட்டோம் என்று சொல்லிவந்தார் என்பது எனக்குத் தெரியும்.இதில் வேடிக்கை என்னவென்றால், யாருமே முன்னவரிடம், தாங்கள் பிரிந்துவந்தபிறகு ஏன் ஸார் ஒரு பாட்டைக் கூட ஒரு ‘எங்கே நிம்மதி” போலவோ, ஒரு ‘கேள்வி பிறந்தது அன்று’ போலவோ போடவில்லை என்று கேட்கவுமில்லை!

குறிப்பு: திரு.ராமமூர்த்திக்கு அண்மையில், சென்னையில் ஒரு விழா எடுத்துச் சிறப்பித்தார்கள் என்ற செய்தியின் விளைவு இந்தப் புலம்பல்! அவர்கள் இருவரும் பிரிந்து ஏறத்தாழ 43 நீண்ட வருடங்களுக்குப் பின் அவரை மக்கள் இப்போதுதான் கண்டு கொண்டிருக்கிறார்கள்!

No comments:

Post a Comment