Wednesday, December 28, 2011

துன்பம் சூழும் நேரம்!





நண்பர்களே! தொடர்ந்து சில நாட்களாக கண்களுக்கு மட்டும் விருந்து படைத்தோம். இன்று, சற்று செவிக்கும் ஈவோமா?!

நம்மிடையே இன்று பாட வந்திருப்பவர், ஜிக்கி. இவர்,இந்தப் பாட்டை, ஸ்ரீதர் எழுதி, பிரகாஷ்ராவ் இயக்கி, டி.சலபதிராவ் என்ற அருமையான இசையமைப்பாளரின் இசையமைப்பில் பாடியிருக்கிறார். சலபதிராவ் இசையமைத்த வெற்றிப் படங்களின் வருசையில், மீண்ட சொர்க்கம், புனர்ஜன்மம் படங்கள் நினைவுக்கு வருகின்றன.

அமரதீபம் படத்தில், சிவாஜி, பத்மினி, சாவித்திரி நம்பியார் முதலியோர் நடித்திருந்தனர். படத்தில், சிவாஜியை சமாதானப்படுத்த பத்மினி பாடுவதுபோல வரும். இதை எழுதியவர், ஆத்மநாதன். பிரபல டி.கே.எஸ். நாடகக் கம்பெனியின் ஆஸ்தானப் பாடகர், இசையமைப்பாளர். பல படங்களில் பாடல் எழுதியுள்ளார்.

இந்தப் படத்தில்,இந்தப் பாட்டைத்தவிர ஜிக்கி பாடியிருந்த ’பச்சைக் கிளி பாடுது’, சுசீலா - ஏ.எம்.ராஜா பாடியிருந்த ‘தேன் உண்ணும் வண்டு’ டி.எம்.எஸ். பாடியிருந்த ‘நாணயம் மனுஷனுக்கு அவசியம்’ என்ற பாடல்களும் பிரபலமடைந்தன. கடைசியில் குறிப்பிட்ட ‘நாணயம்’ பாட்டை எழுதியவர் யார் தெரியுமா? பின்னாளில் பிரபல கதாசிரியர், இயக்குனராகப் பரிமளித்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்!

நமது இன்றைய பாட்டு, சோகமாக இருப்பினும், (தாளத்திற்கு உபயோகித்திருக்கும்) டோலக் வாத்தியம், பாட்டையும், நம்மையும் வேறொரு தளத்திற்குக் கொண்டு செல்கிறது. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத ஜிக்கியின் குரலில் இந்த சிறப்பான பாட்டைக் கேட்டு அனுபவியுங்களேன்! மீண்டும் சந்திப்போமா?

Thunbam soozhum by Krishnamurthy80

4 comments:

  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, சசிகலா அவர்களே!

    ReplyDelete
  2. அருமையான பாடல்
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நன்றி, திரு ரமணி அவர்களே!

    ReplyDelete