Saturday, January 21, 2012

விளம்பர(மே) உலகம்!

எல்லா ஊடகங்களுக்கும் விளம்பரங்கள்தானே உயிர்நாடி! இப்போது நம் நாட்டில் பெரும்பாலான விளம்பரங்கள் பெண்களையும் குழந்தைகளையும் மையமாக வைத்து உருவாகி வருகின்றன. இவற்றில் பல முத்துக்களும் கிடைப்பதுண்டு! உதாரணமாக, ஒரு கேபிள் (wire) நிறுவனத்துடையது, ஒரு அருமையான கவிதை போலிருந்தது. அவர்களின் தயாரிப்பு நெருப்பில் வேகாதது என்பதை நிரூபிக்க தொலைக்காட்சிக்காக எடுத்த விளம்பரம்: ஒரு (கட்டிடத் தொழிலாளியான) தாய், சப்பாத்தி சுடும்போது கையைச் சுட்டுக் கொள்ளுவாள். அவளுடைய (7 அல்லது 8 வயதுடைய) மகன் அதைப் பார்த்துவிட்டு அங்கே கிடக்கும் அந்த கேபிள் துண்டை முறுக்கி, ஒரு கிடுக்கி போல் அமைத்துக் கொடுப்பான். இதுவரையில் சாதாரணமாகப் போகும் விளம்பரம், அந்தத் தாய், தன் மகனைப் பார்க்கும் பார்வையிலே ஒரு கவிதையாகிவிடும்! மகனைப் பற்றின அவ்வளவு எதிர்பார்ப்புகளையும் அந்த நடிகை கண்ணிலே காட்டியிருப்பார்! இது ஒரு வகை.

மேல் நாடுகளில் பல விளம்பரங்கள் எப்படி கண்ணையும் கருத்தையும் கவருகிறது பார்க்கலாமா? இவை வியப்பாக மட்டுமல்ல, எவ்வளவு உழைப்பையும், சிந்தனையையும், பணத்தையும் கொண்டு உருவாக்கப் பட்டிருக்க வேண்டும் என்பதையும் சிந்தியுங்கள்! இவை எந்தப் பொருளுக்கான விளம்பரம் என்பது உங்களுக்குத் தானாகவே புரியும்.





2 comments:

  1. ஆஹா எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்
    அருமையான விளம்பரங்கள்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. நன்றி, திரு ரமணி!

    ReplyDelete