Saturday, January 28, 2012

கொசுவை விரட்ட மூன்று வழிகள்!

என் இனிய நண்பர்களே!

கடவுளும் கொசுவும் ஒன்றென்பார்கள். இருவரும் வியாபிக்காத இடமே உலகில் கிடையாது! நாமும், கொசுவத்தி,சுருள்,பில்லை என்று என்னென்னவோ செய்தும் நம்முடனான தனது பந்தத்தை அறுப்பதாக இல்லை கொசுவார்!

இன்று எனக்குக் கிடைத்த தகவலை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. கொசுக்களை விரட்ட, விலை குறைவான, அனைவராலும் கடைப்பிடிக்கக் கூடிய வழிகள் ஒன்றல்ல, மூன்று சொல்லப் போகிறேன், கவனியுங்கள்! வீட்டில் அனேகமாக சூடம் (கற்பூரம்) இருக்குமல்லவா? அதில் இரண்டு பில்லைகளை எடுத்துக் கொள்ளுங்கள்:

முதல் வழி: வீட்டில் கொசு மேட் வைக்கும் கருவி இருந்தால் (படத்தில் உள்ளதுபோல்) அதனுள் அந்த இரண்டு சூட பில்லைகளை உள்ளே வைத்து ’பிளக்’கில் சொருகிவிடுங்கள். இதைக் காலையிலும், மாலையிலும் ஒரு மணி நேரம் மட்டும் செய்தால்...கொசு போயே போச்சே!



அடுத்தது: கற்பூர பில்லைகளை (அந்துருண்டை போல) அறையில் கொசு அடையும் இடங்களில் போட்டுவைத்தால் அந்த வாசனைக்குக் கொசு வாராது.

மூன்றாவதாக, (அறையின் அளவைப் பொறுத்து) ஒரு தட்டில் நீர் நிரப்பி, அதில் இரண்டு சூட பில்லைகளைப் போட்டு வையுங்கள். தண்ணீர் ஆவியாகும் போது, கற்பூர வாசனை அறை எங்கும் பரவும். அறையும் மணக்கும், கொசுவும் விரட்டப் படும்! உடனடி பலனுக்கு வெதுவெதுப்பான தண்ணீரை உபயோகிக்கலாம்.

இலவச இணைப்பாக: வீட்டில் யாருக்கேனும் நெஞ்சில் சளி கட்டியிருந்தால், கற்பூர எண்ணையைக் கொஞ்சம் மார்பில் தேய்த்துவிடுங்கள். சளியும், மூக்கடைப்பும் அகன்றுவிடும்.

செய்துதான் பாருங்களேன்!

6 comments:

  1. அனைவருக்கும் பயன்படும் அருமையான பதிவு
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, திரு ரமணி!

    ReplyDelete
  3. உபயோகமான தகவல்கள் நன்றி.

    ReplyDelete
  4. நன்றி, விச்சு அவர்களே!

    ReplyDelete
  5. i was searching for this so far..thanks

    ReplyDelete