Monday, February 20, 2012

மீண்டும் கொஞ்சம் இசை!

நண்பர்களே!
கடந்த பல வாரங்களாகக் காணொளிகளிலே மனதைப் பறிகொடுத்தோம். இன்று மீண்டும் நமது தமிழ்த் திரை இசையை ரசிக்கலாமே!

இன்று நீங்கள் கேட்கவிருக்கும் பாட்டு, ஒரு இனிமையான பெண்குரலும் ஒரு உண்மையான ஆண்குரலும் சேர்ந்து அளித்திருப்பது! (என் போன்றவர்களுக்கு,உண்மையான ஆண் குரல் என்பது, பி.யு.சின்னப்பா, டி.எம்.எஸ்., சீர்காழி, திருச்சி லோகநாதன் இவர்களோடு முடிந்து போனது. இப்போது ஒலிக்கும் ஆண்குரல்கள் எல்லாமே எம்.கே.தியாகராஜபாகவதரின் குரல் போலப் பெண் தன்மை கொண்டவைதான்!) பாட்டுக்கு வருவோம்!

இன்றைய பாட்டை சீர்காழியும், ஜிக்கியும் பாடியிருக்கிறார்கள். இது, ’கோமதியின் காதலன்’ என்ற திரைப்படத்தில், டி.ஆர்.ராமச்சந்திரனும், சாவித்திரியும் பாடுவது போலவரும் டூயட். இசைவித்தகரான ஜி.ராமநாதனின் இசையில், கு.மா.பாலசுப்பிரமணியம் என்ற (அக்காலத்திய) பிரபல கவிஞர் எழுதியது. படத்தின் கதையை ‘தேவன்’ எழுதியிருந்ததாக நினைவு. படம், டி.ஆர்.ஆர் அவர்களின் சொந்தத் தயாரிப்பு.

குரல்களின் இனிமையும் (clarity) எனப்படும் துல்லியமும் கவனிக்கத் தக்கவை. உறுத்தாத பின்னணி இசையும், வால்ட்ஸ் எனும் மேல்நாட்டு நடனத் தாளமும் ஒரு கூடுதல் போனஸ். எத்தனை முறைதான் கேளுங்களேன், அலுக்கவே அலுக்காத பாடல்....ரசியுங்கள்:

No comments:

Post a Comment