Sunday, October 16, 2011

அன்பில் மலர்ந்த தாலாட்டு!


இன்று நீங்கள் ரசிக்கப் போகும் தாலாட்டு, அப்போது தான் புதிதாகத் தமிழ்த்திரையில் காலூன்றிய சுசீலாவின் இளமையான, சுகமான குரலில் வருகிறது. 1950களில் வெளிவந்த ‘கணவனே கண்கண்ட தெய்வம்திரைப்படத்தில், இவர் பாடியிருந்த உன்னைக் கண் தேடுதே’, ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோஎன்ற பாடல்களுடன், இன்றைய தாலாட்டான ‘அன்பில் மலர்ந்த நல் ரோஜாஎன்ற அற்புதமான பாடலும் சேர்ந்து, சுசீலாவை எங்கோ உயரத்தில் கொண்டுபோய் உட்கார வைத்தன. அன்று ஆரம்பித்த அவருடைய புகழ், அவரின் தனித் திறமையினாலும் கொஞ்சும் குரலினாலும் இன்றும் கொஞ்சம் கூடக் குறையாமல் அப்படியே இருக்கிறது.
க.க.தெய்வம் திரைப் படத்திற்கு ஏ.ராமாராவ் இசையமைத்திருந்தார். தெலுங்கு, தமிழ்ப் படங்களுக்கு நிறைய நல்ல இசையைக் கொடுத்திருக்கிறார், இவர். இந்த க.க.தெய்வம் படத்தில் முதலில் பானுமதி தான் வில்லியாக நடிப்பதாக இருந்தது. படத்தில் மிகப் பிரபலமான ‘உன்னைக் கண் தேடுதேஎன்ற பாடலை முதலில் அவ்ரைப் பாட வைத்துப் பதிவும் செய்து விட்டிருந்தார்களாம். பின்னர், ஏதோ காரணங்களுக்காக பானுமதி வெளியேற, லலிதா (பத்மினியின் மூத்த சகோதரி) தான் வில்லி என்று முடிவானது. எனவே, இந்தப் பாடலைப் பாட சுசீலாவுக்கு வாய்ப்புக் கிடைத்தது.
இந்தப் பாடல், நாக லோக இளவரசி குடித்துவிட்டு நாயகனான ஜெமினிகணேசனைப் பார்த்துப் பாடுவது போலப் படத்தில் வருகிறது. பாடலின் நடு நடுவே விக்கல் ஓசை வரும். அந்த ஓசை, தன்னுடையது என்று பானுமதி பின்னாளில் பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார்.
நம்முடைய தாலாட்டுக்கு வருவோம்! படத்தின் கதாநாயகியான இளவரசி அஞ்சலிதேவி, சாபம் ஒன்றினால் குரூரமாக மாறியிருக்கும் ஜெமினி கணேசனின் மனைவியாக ஆகிறார். காட்டில் குடிபுகும் அவர்களின் குழந்தையைத் தாலாட்ட அஞ்சலிதேவி இந்தப் பாடலைப் பாடுகிறார்.
பாடலின் ஆரம்ப இசையில் எலக்ட்ரிக் கிடார் என்கிற வாத்தியத்தை (நான் முன்பு குறிப்பிட்டிருந்த) டபிள் பேஸுடன் சேர்த்து உபயோகித்திருக்கிறார்கள். முன்பெல்லாம் இந்த வகை கிடாரை, படுக்கைவசத்தில் வைத்து, ஒரு கையால் மீட்டி, இன்னொரு கையில் கட்டையினால் அதே தந்தியைத் தழுவுவார்கள். அதனால் ஒரு தொடர்ந்த சோகமான சப்தம் கிடைக்கும். படங்களில் சோக ரசத்தை எடுத்துக் காண்பிக்க இந்த வாத்தியத்தை உபயோகிப்பார்கள். (இப்போது இதையே (எலக்ட்ரிக் கிடாரில்) கையில் வைத்துக் கொண்டு மீட்டும் படி வந்துவிட்டது). இன்னும் மற்ற வாத்தியங்களின் கோர்வையும் இருந்தாலும், இந்தப் பாடலின் தாளமும் Walz வகை என்பதையும் சுசீலாவின் குரலில் ஹம்மிங் ஆரம்பித்தவுடன் எப்படி அவை பின்னே போய்விடுகின்றன என்பதையும் கவனியுங்கள்:
இன்னொரு அருமையான தாலாட்டில் சந்திப்போம், நண்பர்களே!

No comments:

Post a Comment